ஜெயலலிதா மரணம்: ஜெ. தீபா 13-ந்தேதி ஆஜராக விசாரணை ஆணையம் சம்மன்

டிசம்பர் 6

ஜெயலலிதா மரணம் தொடர்பாக அவரது அண்ணன் மகள் ஜெ.தீபா வருகிற 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான விசாரணை ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. எழிலகத்தில் உள்ள விசாரணை ஆணையம் அலுவலகத்தில் இதுவரை திமுக மருத்துவ அணி துணைத் தலைவர் சரவணன், மருத்துவக் கல்வி இயக்குநர் விமலா, பொறுப்பு டீன் நாராயணபாபு, மயக்கவியல் துறை பேராசிரியை கலா, உதவி பேராசிரியர் முத்துச்செல்வன் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்தனர். அவற்றை நீதிபதி பதிவு செய்துகொண்டார்.

தீபாவின் கணவர் மாதவன் இன்று விசாரணைக்காக எழிலகத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் ஆஜராக வந்தார். இன்று காலை விசாரணை ஆணையத்தில் ஆஜராகி தனது தரப்பு விளக்கத்தை நீதிபதி முன்பு எடுத்துக் கூறினார். நீதிபதி ஆறுமுகசாமி எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளித்தார். இதனைத்தொடர்ந்து அரசு மருத்துவர் டிட்டோ ஆஜரானார். அவர் விளக்கமும் பதிவு செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து ஜெ.தீபா வருகிற 13-ந்தேதி காலை 10.30 மணிக்கு விசாரணை ஆணையம் முன்பு ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பப்பட்டது.

அரசு மருத்துவர்கள் பாலாஜி, தர்மராஜ் ஆகியோர் நாளை ஆஜராகவும் ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது திருப்பரங்குன்றம், தஞ்சை, அரவக்குறிச்சி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களுக்காகத் தேர்தல் ஆணையத்தில் அளித்த படிவத்தில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டது. அந்தச் சமயத்தில் தனது முன்னிலையில் ஜெயலலிதாவின் கைரேகை பதிவு செய்யப்பட்டதாக அரசு மருத்துவர் பாலாஜி சாட்சி கையெழுத்துப் போட்டுள்ளார். இதன் அடிப்படையில் மருத்துவர் பாலாஜியிடம் விசாரணை நடத்த ஆணையம் முடிவு செய்துள்ளது. 

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...