ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் அஞ்சலி: இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் அதிமுகவினர் மவுனப் பேரணி

டிசம்பர் 05

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை- முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் தலைமையில் அதிமுகவினர் மவுன ஊர்வலமாகச் சென்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினர்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சைக்கு பின் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி ஜெயலலிதாவின் உயிர் பிரிந்தது. அவரது உடல் எம்.ஜி.ஆர்., அண்ணா சமாதிகளுக்கு நடுவில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அதிமுகவினரால் அனுசரிக்கப்பட்டது. அவரது சமாதியில் மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் மவுன ஊர்வலமும் நடைபெற்றது. 

அண்ணா சிலையில் இருந்து அதிமுகவினர் ஊர்வலமாகச் சென்றனர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் அமைதிப் பேரணி வாலாஜாரோடு, விருந்தினர் மாளிகை வழியாகச் சென்று மெரினா கடற்கரையை அடைந்தது. அமைச்சர்கள், எம்பி., எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து அமைதி பேரணியில் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து, ஜெயலலிதா சமாதியில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், அவைத் தலைவர் மதுசூதனன் மற்றும் அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஜெயலலிதா நினைவு நாளையொட்டி மெரினா கடற்கரையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. அவரது சமாதியில் பெண்கள் சிலர் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். அண்ணாசாலை முதல் எழிலகம் வரையிலும் கடற்கரை சாலைப் பகுதி முழுவதும் அதிமுகவினர் குவிந்ததால் அந்தப் பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு இருந்தது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் ஜெயலலிதா சமாதியில் அஞ்சலி செலுத்திய பின் டிடிவி தினகரன் அணியினரும் சமாதியில் அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...