அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு நல்ல சேதி- 7வது ஊழியக் குழு பரிந்துரைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல்!

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் ஏற்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சரவை மாற்றத்துக்குப் பிறகு நடந்த முதல் கூட்டம் இதுவாகும். 

இக்கூட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான 7-வது ஊதியக்குழு பரிந்துரைகள் குறித்து அமைக்கப்பட்ட வல்லுனர் குழுவின் அறிக்கை குறித்து விவாதிக்கப்பட்டது. 

இதன் அடிப்படையில் ஊதிய உயர்வு அளிப்பது குறித்து அமைச்சரவையில் இறுதி செய்யப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 20 சதவிகிதம் வரை சம்பளம் உயர்த்தப்படுகிறது. 

ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை நிறைவேற்றக் கோரி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மிகப்பெரிய அளவில் போராட்டத்தில் நடத்தினர். 

இதனையடுத்து இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ள நிலையில் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை ஏற்று மத்திய அரசின் ஏழாவது ஊழியக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கலைஞரின் 96 வது பிறந்தநாள்: தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் மரியாதை!

கலைஞரின் 96 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை à...

திரிபுரா, நாகலாந்தில் மலரும் தாமரை : மேகாலயாவில் ஓங்கியது கை

திரிபுரா மற்றும் நாகலாந்து சட்டப்பேரவை தேரà¯...

திருப்பதி மலைப்பாதையில் எலக்ட்ரிக் பேருந்துகளை இயக்க முடிவு

திருப்பதியில் இருந்து திருமலை வரை முதல் முறà...

மகளிர் தினத்தன்று சென்னையில் கமலஹாசனின் கட்சி மாநாடு

சென்னையில் மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் à...