பிரசவ தழும்புகள் என்ன செய்தாலும் போகவில்லையா? கண்டிப்பாக இவை பலன் தரும்!! ட்ரை பண்ணுங்க!!

உடலில் மெல்லிய கோடுகள் போல ஏற்படுவது தான் ஸ்ட்ரேட்ச் மார்க். இது உடல் எடை அதிகரிப்பு, உடல் எடை குறைப்பு அல்லது பேறு காலங்களில் ஏற்படக்கூடியது. இது உடலில் எந்த இடங்களில் வேண்டுமானாலும் ஏற்படக்கூடியவை. ஆனால், பெரும்பாலும் இடுப்பு, வயிறு மற்றும் தொடை பகுதிகளில் தான் ஏற்படும். 

ஸ்டரேட்ச் மார்க்கை போக்குவதற்கு எத்தனையோ சிகிச்சை முறைகள் உள்ளன. ஆனால், அந்த சிகிச்சை முறைகள் பக்க விளைவுகள் இல்லாமல் இருப்பதில்லை. வேறு எதாவது அழகு சாதன முறைகளை உபயோகித்தால் பணம் அதிகமாக செலவிட நேரிடும். எனவே, இது போன்ற பிரச்சனை ஏற்படுத்தக்கூடிய வழிமுறைகள் கையாளுவதற்கு பதிலாக இயற்கை நமக்கு அளித்த பொருட்களை வைத்து நாமே இவற்றை எளிமையாக சரிசெய்து விடலாம்

அந்த மாதிரியான இயற்கை அளித்த அற்புத பொருள் தான் தேங்காய். தேங்காயை எண்ணெயை பயன்படுத்தி உடலில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்களை கண்ணுக்கு எளிதில் தெரியாத மாதிரி குறைத்துவிடும். உடலில் எளிதில் உறிஞ்சிக் கொள்ளக்கூடிய எண்ணெய் தேங்காய் எண்ணெய். 

இத்துடன் பிற இயற்கை பொருட்களை சேர்த்து உபயோகித்தால் சீக்கிரம் கோடுகள் மறைவதை நீங்களே பார்க்கலாம். இங்கே, தேங்காய் எண்ணெயை எப்படி எல்லாம் சருமத்திற்கு பயன்படுத்தி ஸ்ட்ரெட்ச் மார்க்களை போக்கலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் இப்போது அவற்றை பார்க்கலாம்...

பாதிக்கப்பட்ட பகுதியில் நேரடியாக தடவவும் : 

தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி, ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள இடத்தில் தடவி மென்மையாக மசாஜ் செய்யவும். இதனால் விரைவில் சருமத்தில் உள்ள அசிங்கமான ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மறைய ஆரம்பிக்கும். நல்ல பலனைப் பெற இந்த முறையை தினமும் குறைந்தது 2 தடவை செய்யுங்கள்.




தேங்காய் எண்ணெயுடன் ஆலிவ் ஆயில் : 

1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அதனை ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள பகுதியில் தடவி வட்ட சுழற்சியில் மசாஜ் செய்து, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரில் அலசுங்கள்.




தேங்காய் எண்ணெயுடன் கொக்கோ வெண்ணெய் : 

1 டீஸ்பூன் கொக்கோ வெண்ணெயுடன், 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி குறைந்தது 10 நிமிடம் மசாஜ் செய்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த பழங்கால சிகிச்சை முறையை வாரத்திற்கு குறைந்தது 3 முறை பின்பற்றி வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

தேங்காய் எண்ணெயுடன் கற்றாழை ஜெல் : 

2 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள பகுதியில் தடவி மென்மையாக மசாஜ் செய்து, 1 மணிநேரம் நன்கு ஊற வைத்து, நீரில் நனைத்த துணியால் துடைக்க வேண்டும். இந்த முறையை தினமும் பின்பற்றினால், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் மறைய ஆரம்பிப்பதைக் காணலாம்.

தேங்காய் எண்ணெயுடன் விளக்கெண்ணெய் : 

1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெயுடன் 1 டீஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்ட்ரெட்ச் மார்க் மீது தடவி மென்மையாக மசாஜ் செய்து, 20 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

தேங்காய் எண்ணெயுடன் காபி : 

1 டீஸ்பூன் காபி தூளுடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி 5-10 நிமிடம் மசாஜ் செய்து, பின் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3-4 முறை பின்பற்றினால் நல்ல பலன் கிடைக்கும்.

தேங்காய் எண்ணெயுடன் மஞ்சள் தூள்: 

1 டீஸ்பூன் மஞ்சள் தூளுடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்ட்ரெட்ச் மார்க் உள்ள பகுதியில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

தேங்காய் எண்ணெயுடன் வைட்டமின் ஈ ஆயில்: 

3-4 வைட்டமின் ஈ கேப்ஸ்யூலை எடுத்து அதில் உள்ள எண்ணெயை ஊசி பயன்படுத்தி துளையிட்டு ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, ஸ்ட்ரெட்ச் மார்க் பகுதியில் தடவி குறைந்தது 10 நிமிடம் மென்மையாக மசாஜ் செய்து, 1/2 மணிநேரம் கழித்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.

தேங்காய் எண்ணெயுடன் பாதாம் எண்ணெய்:

இது தான் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தி ஸ்ட்ரெட்ச் மார்க்குகளைப் போக்குவதற்கான கடைசி வழி. அதற்கு 1 டீஸ்பூன் பாதாம் எண்ணெயுடன் 1 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து கலந்து, வெதுவெதுப்பாக சூடேற்றி, பின் அந்த எண்ணெயை பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மசாஜ் செய்து, ஊற வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 4 முறை செய்து வந்தால், ஸ்ட்ரெட்ச் மார்க்குகள் வேகமாக மறைவதைக் காணலாம்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...