திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர் சரசு(60). இவர் கொரோனா பாதிப்பு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த நிலையில் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இவரைத் தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டாக அதிகரித்துள்ளது.


திருப்பூர்: அனுப்பர்பாளையத்தில் கொரோனா தொற்றுக்கு மூதாட்டி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளைம் நேரு நகரைச் சேர்ந்தவர் சரசு (எ) சரஸ்வதி (62). இவர் கடந்த மாதம் 23ஆம் தேதி பக்கவாத நோய் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வெள்ளக்கோவில் கே.பி.சி.நகர் பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி(82) என்பவர் கொரோனா பாதித்து இறந்தார். இதன் மூலம் திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.

இதனிடையே இறந்த மூதாட்டி உடன் தொடர்பில் இருந்தவர்களை கண்காணித்து பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



மேலும் திருப்பூர் மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறையினர் சார்பில் அனுப்பர்பாளைம் நேரு நகர் பகுதியில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதாரம் பேணி வருகின்றனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...