கோவையில் பிளஸ் 2 மாணவர்கள் 2 பேருக்கும், ஆசிரியர்கள் 7 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி

கோவை மாவட்டத்தில் இதுவரை 87 பள்ளி/கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது, பாதிக்கப்பட்ட பள்ளி மூடப்பட்டு, கிருமி நாசினி செய்து சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.



கோவை: ஊரடங்கு தளர்வு அளிக்கப்பட்டதால் பள்ளி கல்லூரிகளை திறக்க கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி அரசு அனுமதி அளித்தது.

பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை நேரடி வகுப்புகள் சுழற்சி முறையில் நடத்தப்பட வேண்டும், ஒரு வகுப்பில் 20 மாணவர்கள் வீதம் சமூக இடைவெளி விட்டு அமர வேண்டும் மற்றும் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கட்டாயமாக கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அறிவுறுத்தப்பட வேண்டும் போன்ற பல கட்டுப்பாடுகளுடன் பள்ளிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், ஒரு சில மாவட்டங்களில் சில பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அரசின் வழிகாட்டு முறைப்படி மாணவர்களுக்கு கொரோனா பரவாமல் தடுக்க முகாம்கள் அமைக்கப்பட்டு, பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த பரிசோதனையில் கோவை மாவட்டத்தில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், சூலூர், உள்ளிட்ட பகுதிகளில் படிக்கும் 87 பள்ளி கல்லூரி மாணவ மாணவிகளுக்கு மற்றும் ஒரு ஆசிரியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கோவை நகரில் தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியர்கள் 7 பேர், பிளஸ் 1, பிளஸ் டூ மாணவர்கள் 2 பேருக்கும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, அந்த பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டுள்ளது. தொற்று உறுதி செய்யப்பட்ட 7 ஆசிரியர்கள், மற்றும் 2 மாணவர்கள் ஆகியோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளியில் படிக்கும் பிற மாணவர்கள் மற்றும் பெற்றோர் நலன் கருதி, பள்ளியின் பெயர் வெளியிடப்படவில்லை.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...