கோவை சாடிவயல் அருகே கேரளா சென்று வந்த நபருடன் தொடர்பில் இருந்த பழங்குடி கிராமத்தினர் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

கோவை: கோவை சாடிவயல் அருகே கேரளா சென்று திரும்பிய நபருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில், பழங்குடி கிராமத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


கோவை: கோவை சாடிவயல் அருகே கேரளா சென்று திரும்பிய நபருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்ட நிலையில், பழங்குடி கிராமத்தில் மேலும் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கோவை மாவட்டத்தை ஒட்டிய கேரளா மாநில எல்லைகளில் உள்ள 13 சோதனைச் சாவடிகளில் சுகாதாரத் துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், கோவை மாவட்டம் ஆலந்துறை சாடிவயல் அருகே வெள்ளபதி பழங்குடி கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் கடந்த சிலநாட்களுக்கு முன்பு கேரள மாநிலம் அட்டப்பாடிக்கு சென்று வந்தார்.

இதையடுத்து, அவருக்கு திடீரென காய்ச்சல் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டது. உடனடியாக அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது.

இதனால் அவரை சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து, அந்த கிராமத்தில் இவரை சுற்றி வாழ்ந்த மக்களுக்கு 42 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 10 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அவர்களும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...