டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ்... மக்கள் அச்சப்பட தேவையில்லை... பாதிக்கப்பட்ட பெண் குணமடைந்தார்... சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்..!

கோவை: டெல்டா பிளஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த பெண் தொற்று பாதிப்பல் இருந்து குணமடைந்துள்ளார் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.


கோவை: டெல்டா பிளஸ் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட சென்னையைச் சேர்ந்த பெண் தொற்று பாதிப்பல் இருந்து குணமடைந்துள்ளார் என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.

கவியரசு கண்ணதாசனின் 95வது பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள படத்திற்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள், மா.சுப்பிரமணியன், தங்கம் தென்னரசு, ரகுபதி, பெரிய கருப்பண் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், ‘‘சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்த செவிலியர் ஒருவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தொற்று கண்டறியப்பட்ட நிலையில், தொடர் சிகிச்சைக்குப் பிறகு நலம் பெற்று பணிக்கு திரும்பி இருப்பதாகத் தெரிவித்துள்ளார். மேலும், அந்த செவிலியருடன் தொடர்பில் இருந்த ஒருவருக்கு பரிசோதனையில் நெகடிவ் வந்திருப்பதாகக் கூறினார். எனவே, டெல்டா பிளஸ் வைரஸ் குறித்து யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. விமான நிலையங்களில் கட்டுப்பாடுகள் தொடர்வதாகவும், வெளிநாட்டு விமான சேவைகள் தொடங்கினால் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்படும்'' என தெரிவித்தார்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...