பொள்ளாச்சி மற்றும் ஆனைமலையில் இன்று 50 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு..!

கோவை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையில் கோவை மாவட்டம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து கொண்டு வருவது ஆறுதலாக உள்ளது. இன்று பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதில் 50 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.



கோவை: தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையில் கோவை மாவட்டம் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. 

கடந்த சில தினங்களாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து கொண்டு வருவது ஆறுதலாக உள்ளது. இன்று பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை பகுதில் 50 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி பகுதியில் இன்று நகரத்தில் 6 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 11 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 15 பேர், ஆனைமலையில் 18 பேர் என 50 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நோய்த்தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதாரத் துறை, வருவாய்த் துறை அதிகாரிகள் தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஊரடங்கில் சில தளர்வுகள் நடைமுறையில் இருந்தாலும் பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியில் வருவதைத் தவிர்க்க வேண்டும். அரசு விதித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...