கோவை கிணத்துக்கடவு தாலூகா பகுதியில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - சுகாதாரத்துறை தகவல்

கோவை: கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தாலூகா பகுதியில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டம், கிணத்துக்கடவு தாலூகா பகுதியில் இன்று 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்து வருவதால் மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

இந்நிலையில், இன்று கிணத்துக்கடவில் மேலும் 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் கிணத்துக்கடவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1,886 பேரில் 1,825 பேர் குணமடைந்துள்ளனர்.

இதனிடையே, இன்று கிணத்துக்கடவு பேரூராட்சி மற்றும் கருப்பம்பாளையம் பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமில் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத் துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...