கொரோனாவால் பாதித்தவர்கள் குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கு புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும் - சுகாதாரத்துறை அதிகாரி அறிவுறுத்தல்!

கோவை: கொரோனாவால் பாதித்தவர்கள் குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கு புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் அறிவுறுத்தி உள்ளனர்.


கோவை: கொரோனாவால் பாதித்தவர்கள் குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கு புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும் என்று சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் அறிவுறுத்தி உள்ளனர்.

இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கொரோனா வைரஸ் கிருமிகள் பஞ்சு போன்று இருக்கும் நுரையீரலை கடுமையாக பாதிக்கின்றது. இதனால் நுரையீரல் பஞ்சு தன்மையை இழந்து சற்று கடினமாகிறது. இதன் காரணமாக நுரையீரலின் சுருங்கி விரியும் தன்மை பாதிக்கப்படுகிறது.

எனவே, நுரையீரலை பாதிக்கும் விதமாக தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் புகைபிடிக்கக்கூடாது. மீறி புகைப்பிடித்தால் நுரையீரல் பாதிப்பு மேலும் அதிகமாகும். அறிகுறி இன்றி தொற்று உறுதி செய்யப்பட்டவர்களும் இதில் அலட்சியமாக இருக்கக்கூடாது. அவர்களின் நுரையீரலும் பாதிக்கப்பட்டு இருக்கும்.

ஆகவே, கொரோனா பாதித்தவர்கள் குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்கு புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும். கொரோனா முதல் அலையின் போது 50 வயதிற்கு மேற்பட்டவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டனர். ஆனால், இரண்டாவது அலையில் 25 வயது உள்ளவர்களும் பாதிக்கப்பட்டதுடன், அவர்களுக்கு மூச்சு திணறலும் ஏற்பட்டது.

இதேபோல் முதல் அலையின் போது குறைந்த நபர்களுக்கே உடலில் ஆக்சிஜன் அளவு 95-க்கு கீழ் இருந்தது. ஆனால், இந்த இரண்டாவது அலையில் பலருக்கு ஆக்சிஜன் அளவு 90-க்கு கீழ் சென்றது. எனவே, பல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்தி அனைவரின் உடலிலும் ஆக்சிஜன் அளவு சரிபார்க்கப்பட்டது. மூன்றாவது அலையில் அனைவரும் பாதுகாப்புடன் இருக்க வேண்டும். முககவசம் அணிதல் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...