பொள்ளாச்சியில் இன்று 30 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி..!

கோவை: பொள்ளாச்சியில் இன்று 30 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: பொள்ளாச்சியில் இன்று 30 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாட்களாகவே கொரோனா பரவல் குறைந்து வருகிறது. கடந்த ஒரு வாரமாகவே 50-க்கும் கீழ் கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இருந்து வருகிறது. பாதிப்பு கணிசமாக குறைந்து வருகிறது.

இந்தநிலையில், இன்று பொள்ளாச்சி நகர் பகுதியில் 4 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 12 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 14 பேருக்கும் என 30 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதியாகி உள்ளது. மேலும், நந்தனார் காலனியைச் சேர்ந்த 33 வயது நபர் கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டு பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று உயிரிழந்தார். நோய் பாதிப்பு ஏற்பட்ட இடங்களில் சுகாதாரத் துறையினர் தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...