கோவை மாவட்டத்தில் இன்று மேலும் 1,227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி - மொத்த பாதிப்பு 2,09,481 ஆக உயர்வு!

கோவை: கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1,227 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1,227 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் தொடர்ந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த மாநில அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், கோவை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 1,227 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவையில் மொத்த பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2,09,481 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பலனின்றி இன்று மேலும் 17 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,823 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல, கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்று வந்த 2,787 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் கோவையில் இதுவரை கொரோனா தொற்று சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,94,838 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 12,820 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...