வால்பாறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி போடும் சிறப்பு முகாம்..!

கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக, வால்பாறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.


கோவை: கொரோனா பெருந்தொற்றுப் பரவலைத் தடுக்கும் நடவடிக்கையாக, வால்பாறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் மாற்றுத்திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி போடும் சிறப்பு முகாம் இரண்டாம் நாளாக இன்று நடைபெற்றது. வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற முகாமில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. முன்னதாக, பயனாளிகளின் ஆதார் கார்டு சரிபார்ப்பு செய்த பின்னர், விண்ணப்பம் நிரப்பப்பட்டது. தொடர்ந்து தடுப்பூசி போடப்பட்டது. வாகன வசதி இல்லாதவர்களுக்கு சமூக ஆர்வலர் ஜெயன் ஏற்பாட்டில் வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டு வால்பாறைக்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.



வால்பாறை பகுதியில் உள்ள ஆண், பெண், மாற்றுத்திறனாளிகள் ஆர்வத்துடன் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இம்முகாமில் வட்டார வள மைய தலைமை மருத்துவர் பாபு லஷ்மன் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள் செவிலியர்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...