தமிழகத்தில் குறைந்து வரும் கொரோனா பாதிப்பு: சுகாதாரத் துறை தகவல்..!

கோவை: அண்மையில் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக தமிழக சுகாதாரத் துறை அறிக்கையின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: அண்மையில் கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு வேகமாக அதிகரித்து வந்த நிலையில், தற்போது தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பெருந்தொற்று பாதிப்பு குறைந்து வருவதாக தமிழக சுகாதாரத் துறை அறிக்கையின் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் 15,105 பேரும் மற்ற மாநிலத்தவர் 3 பேரையும் சேர்த்து 15,108 பேர் கொரோனா பெருந்தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 374 பேர் உயிரிழந்து உள்ளனர். 27,463 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 22 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் அளிக்கிறது. சென்னையில் 31 நாட்களாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், ‘‘தமிழகத்தில் நேற்று மட்டும் 1,82,878 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 15,108 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதியானது. இதன் மூலம் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,39,705 ஆக அதிகரித்து உள்ளது. மேலும், தற்போது வரை 2,97,90,743 மாதிரிகள் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இன்று கொரோனா உறுதியானவர்களில் 8,342 பேர் ஆண்கள், 6,766 பேர் பெண்கள். இதன் மூலம், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 13,70,546 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 9,69,121 ஆகவும் அதிகரித்து உள்ளது. 27,463 பேர் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு வீடு திரும்பியதைத் தொடர்ந்து, கொரோனா தீநுண்மி பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,48,352 ஆக உயர்ந்தது. 374 பேர் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 130 பேர் தனியார் மருத்துவமனையிலும், 244 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனா தீநுண்மி காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 29,280 ஆக அதிகரித்து உள்ளது'' என்று கூறப்பட்டு உள்ளது.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...