பொள்ளாச்சி மற்றும் ஆனைமலையில் இன்று 145 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி..!

பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் ஆனைமலையில் இன்று ஒரே நாளில் 145 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் ஆனைமலையில் இன்று ஒரே நாளில் 145 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகிறது. இதனைத் தடுக்கும் பொருட்டு தமிழக அரசு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. இன்று பொள்ளாச்சி நகராட்சியில் 32 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 18 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 32 பேருக்கும் ஆனைமலையில் 63 பேருக்கும் என மொத்தம் 145 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நோய்த்தொற்று ஏற்பட்ட பகுதிகளில் சுகாதாரத் துறையினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், நோய் பாதிப்பு அதிகமுள்ள பகுதிகளில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. நாளுக்கு நாள் கொரோனா பெருந்தொற்று அதிகரித்து வருவதால், பொதுமக்கள் விழிப்புடன் இருக்க சுகாதாரத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...