பொள்ளாச்சி மற்றும் ஆனைமலையில் இன்று 147 பேருக்கு கொரோனா தொற்று உறுதி..!

பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்றின் பரவல் தீவிரமாக உள்ள நிலையில், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலையில் இன்று சுமார் 147 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


பொள்ளாச்சி: கொரோனா பெருந்தொற்றின் பரவல் தீவிரமாக உள்ள நிலையில், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலையில் இன்று சுமார் 147 பேருக்கு கொரோனா பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தீவிரமாக கொரானா பெருந்தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு பல தீவிர நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால், தொற்று தீவிரமாக அதிகரித்து வருகிறது. இன்று பொள்ளாச்சி பகுதியில் 28 பேருக்கும், வடக்கு ஒன்றியத்தில் 46 பேருக்கும், தெற்கு ஒன்றியத்தில் 28 பேருக்கும் ஆனைமலையில் என ஒரே நாளில் சுமார் 147 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நோய்த் தொற்று ஏற்பட்ட இடங்களில் சுகாதாரத்துறையினர் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கொடிய தொற்று பாதித்த பகுதிகளை தனிமைப்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடைபிடிக்க பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...