வாட்டர் பால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம்

வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள வாட்டர் பால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.


வால்பாறை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள வாட்டர் பால் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள வாட்டர் பால் தேயிலைத் தோட்டத்தில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்தநிலையில், கொரோனா பெருந்தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் வாட்டர் பால் தேயிலைத் தோட்டத்தில் காய்ச்சல் பரிசோதனை சிறப்பு முகாம் நடைபெற்றது.



முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு கொரோனா சளி பரிசோதனையும் இரத்த அழுத்தப் பரிசோதனையும் நடைபெற்றது. தொடர்ந்து, அவர்களது ஆதார் எண்ணோடு விண்ணப்பங்கள் நிரப்பப்பட்டு அவர்களுடைய உடல் வெப்பநிலை சோதனையுடன் காய்ச்சல் பரிசோதிக்கப்பட்டது. இந்த முகாமில் வட்டார வளமைய தலைமை மருத்துவர் பாபு லக்ஷ்மன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், செவிலியர்கள், வாட்டர் பால் தேயிலைத்தோட்ட மருத்துவர், செவிலியர், அலுவலர்கள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...