கோவை தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா தடுப்பூசி: நேற்று மட்டும் 551 பேருக்கு போடப்பட்டது!

கோவை: கோவையில் உள்ள 11 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. நேற்று மட்டும் 551 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.



கோவை: கோவையில் உள்ள 11 தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. நேற்று மட்டும் 551 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

கோவையில் அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என மொத்தம் 12 பிளாக்குகளில் உள்ள 27 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. டாக்டர்கள், நர்சுகள், சுகாதாரப் பணியாளர்கள் என தினமும் சராசரியாக 100 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 10 ஆயிரம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் மொத்தம் 19,650 பேர் தடுப்பூசி போட்டுக் கொள்ள விருப்பம் தெரிவித்து ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர். இதையடுத்து தனியார் மருத்துவமனைகளிலும் தடுப்பூசி மையம் அமைக்க சுகாதாரத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

கோவையில் 11 தனியார் மருத்துவமனைகள் தடுப்பூசி போட தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் 150 பேருக்கும், ராயல் கேரில் 52 பேருக்கும், பி.எஸ்.ஜி-யில் 35 பேருக்கு, கே.எம்.சி.ஹெச். மருத்துவமனையில் 10 பேருக்கும், ராமகிருஷ்ணா மருத்துவமனையில் 44 பேருக்கும், கே.ஜி. மருத்துவமனையில் 51 பேருக்கும், கங்கா மருத்துவமனையில் 30 பேருக்கும், கொங்கு நாடு 80, கற்பகம் 99 என நேற்று மட்டும் 551 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...