டயட்டில் இருப்பவர்கள் சாப்பிட வேண்டிய ஆரோக்கிய சிற்றுண்டிகள் !!

ஸ்நாக்ஸ் - இன்று ப்ரீ கே ஜி செல்லும் குழந்தைக்கு கூட இது ஒரு விருப்பமான பெயர். ஸ்நாக்ஸ் என்று இப்போது எல்லோராலும் அழைக்கப்படும் சிற்றுண்டியை பற்றி இப்போது காண்போம். 

மூன்று வேளை உணவுகளுக்கு மத்தியில் உண்ணப்படும் ஒரு சிறிய உணவை நாம் சிற்றுண்டி என்று கூறுகிறோம். 

சிற்றுண்டி என்ற ஸ்நாக்ஸ் வயிற்றை நிறைப்பதற்காக அல்ல. வயிற்றில் ஏற்படும் சின்ன சின்ன பசியை போக்குவதற்காக. ஒரு புத்துணர்ச்சி கொடுப்பதற்காகவும் இதனை உண்ணலாம்.

எது ஆரோக்கியமான சிற்றுண்டி? 

கார்போஹைட்ரேட்டுகள், புரதம், ஆரோக்கியமான கொழுப்பு, பழங்கள், காய்கறிகள் - உணவு ஊட்டச்சத்துக்கள், போன்றவை மதிய உணவுகள் மற்றும் இரவு உணவுகள் இருப்பதை போல சிற்றுண்டியிலும் இருக்க வேண்டும். அதுவே ஒரு ஆரோக்கிய சிற்றுண்டியாகும்.



சப்பாத்தி அல்லது பூரியை சிறு வட்டமாக செய்து அதில் தக்காளி பேஸ்டை தடவி குறைந்த கொழுப்பு சீஸை அதன் மீது வைத்து கொடுக்கலாம். 

கோதுமையில் கார்போஹைட்ரெட் உள்ளது .தக்காளி பேஸ்ட் ஒரு சைவ உணவு. குறைந்த கொழுப்பு சீஸ் ஒரு ஆரோக்கிய கொழுப்பு மற்றும் புரத பொருள். 

கண்ணை கவரும் நிறங்கள் கொண்ட பழங்களை சிறிய துண்டுகளாக்கி அதனுடன் நல்ல கெட்டி தயிர் சேர்த்து செய்யும் ஒரு வகை சாலட் குழந்தைகளுக்கு நிச்சயம் ஒரு பிடித்த சிற்றுண்டியாக இருக்கும். விரும்பினால் இதனுடன் ஐஸ்கட்டிகளை சேர்த்துக்கொள்ளலாம். தயிரில் கார்போஹைட்ரெட், புரதம் மற்றும் ஆரோக்கிய கொழுப்பு உள்ளது. பழங்கள் ஊட்டச்சத்துக்கள் கொண்டது.



வாழை பழம் அல்லது ஆப்பிளை நீளவாக்கில் சிறு சிறு துண்டுகளாக வெட்டி கொள்ளவும். இவற்றை வேர்க்கடலை வெண்ணெய்யில் தொட்டு சாப்பிட கொடுக்கலாம். 

கொண்டைக்கடலையை வேக வைத்து மசித்து அதனுடன் பூண்டு சேர்த்து, எலுமிச்சை சாறு பிழிந்து எடுத்து வைத்து கொள்ளவும். அதனுடன் பீ நட் பட்டர் அல்லது வேறு வெண்ணை பேஸ்டை சேர்த்து அதில் காரட்டை தொட்டு சாப்பிட கொடுக்கலாம். 

குக்கீகள், சிப்ஸ் மற்றும் பதப்படுத்தப்பட்ட பாக்கில் வரும் சிற்றுண்டிகள் வழக்கமாக சர்க்கரை, உப்பு மற்றும் ஆரோக்கியமில்லாத சுவையூட்டிகள் கொண்டு நிரம்பியிருக்கிறது . இதனை உண்பதால் குழந்தைகளுக்கு எந்த ஒரு வளர்ச்சியும் கிடைக்க போவதில்லை. மாறாக தீய விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...