தொடர்ந்து விக்கல் வந்தால் அதனை தடுத்து நிறுத்துவது எப்படி?

நடுத்தர வயதுடையோர் எல்லோரும் உடல் ரீதியாகவும் மற்றும் மன ரீதியாகவும் வாழ்வில் நிறைய நிகழ்வுகளைக் கடந்தே வந்திருப்பர், அந்த உடல்ரீதியான நிகழ்வுகளில் ஒன்றுதான் விக்கல். 

விக்கல் எடுக்கும் சமயத்தில், நாம் எப்படியாவது விக்கலை நிறுத்த வேண்டும் என பிரயத்தனம் செய்வதும், அதனால் அடையும் மன உளைச்சல்களும் மிக அதிகம்தான், சில நிமிடங்களே நீடிக்கும் விக்கல், நீங்குவதற்குள் நம்மை ஒரு பாடுபடுத்திவிடும் என்பதில், ஐயமில்லை.

துளசி : 



துளசி இலைகள் சிறிதளவு எடுத்து வாயில் மென்று வர, விக்கல் தீர்ந்துவிடும். துளசி இலைகள் கிடைக்கவில்லை என்றால், துளசி தைலம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் அதை வாங்கிப் பயன்படுத்தலாம்.

மூச்சடக்குதல் : 

விக்கல் எடுக்கும் சமயத்தில், மூச்சை நன்கு ஆழமாக உள்ளே இழுத்து, சற்று நேரம் மூச்சுக் காற்றை உள்ளேயே வைத்திருந்து பின்னர், மெதுவாக மூச்சை வெளியேற்றுவதன் மூலம், விக்கலைப் போக்கலாம்.

சர்க்கரை : 



பொதுவாக கிராமங்களில் செய்வார்கள், விக்கல் வரும்போது, ஒரு ஸ்பூன் சர்க்கரையை வாயில் போட்டுக்கொள்ள, விக்கல் நீங்கிவிடும். 

தயிரில் சற்றே கூடுதலாக உப்பிட்டு, கொஞ்சம் கொஞ்சமாகப் பருகிவர, விக்கல் தீரும்.

விக்கல் வராமல் தடுப்பது எப்படி? 

விக்கல் வராமல் தடுக்க, பெரிதாக எதுவும் தேவையில்லை, வழக்கமாக நமது உடல் நலனுக்கு என்ன செய்வோமோ, அதையே தொடர்ந்து செய்து வந்தால் போதும். உதாரணமாக, சூடான அல்லது குளிரான நீராக அல்லாமல், சாதாரண தண்ணீரை தினமும் அடிக்கடி நிறைய பருக வேண்டும், குறைந்த பட்சம் எட்டு லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு நாம் பருக வேண்டும். 

அதிக காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். 

எல்லாவற்றுக்கும் மேலாக, உணவு உண்ணும்போது, மெதுவாக, உணவை நன்கு மென்று உண்ண வேண்டும், அளவுக்கு மீறி உண்ணாமல் அளவுடன் சாப்பிட வேண்டும், அவசரம் கூடாது. 

நன்கு செரிக்கக்கூடிய உணவுகளை மற்றும் பழங்களை சாப்பிட வேண்டும். சூடான உணவு வகைகளை தவிர்த்து, நோய் எதிர்ப்பு சக்தியைத் தரும், ஊட்டமுள்ள புரதச்சத்துகள் அதிகமுள்ள உணவு வகைகள் சாப்பிடவேண்டும்.

மருத்துவரை நாடுதல் : 

மேற்கண்ட முறைகளில் விக்கல் தீராமல் நெடுநேரம் தொடர் விக்கலாக நீடித்தால் கல்லீரல் தொடர்பான பாதிப்பாக இருக்கும். உடல் வறட்சி, கண்கள் தெளிவின்மை மற்றும் இலேசான மயக்கம் ஏற்படக்கூடும், உடனே மருத்துவரை அணுகுதல் நலம்.

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...