தாய்ப்பால் சுரக்க உதவும் தண்ணீர்விட்டான் கிழங்கின் மகத்துவம் பற்றி தெரியுமா?

ஆறடி வரை வளரக்கூடிய "சதாவரி" என்ற பெயர்கொண்ட கொடி இனத்தை ச்சார்ந்த அடர் பச்சையில் ஊசி போன்ற இலைகளும் முட்கள் நிறைந்த தண்டினையும் கொண்ட தாவரத்தின் அடிவேர்தான் தண்ணீர்விட்டான் கிழங்கு.

நீர்த்தன்மை நிறைந்த சாரம் கொண்ட இந்தக் கிழங்கில் இருந்து அதிகம் பெண்களுக்காகவே, பல வகை அரிய மூலிகை மற்றும் அலோபதி மருந்துகள் செய்யப்படுகின்றன.

பருவம் வந்த காலம் முதல் மாத சுழற்சி நீங்கும் "மெனோபாஸ்" காலம் வரை, பெண்களுக்கு ஏற்படும் நோய்களிலிருந்து காத்து, உற்ற தெய்வமாக, தாயாக விளங்கும் வரப்பிரசாதி தான் தண்ணீர்விட்டான் கிழங்கு.

இனிப்புச்சுவையுடன் குளிர்ச்சிமிக்க தண்ணீர் விட்டான் கிழங்கு, வேர்க் கிழங்குகள் மூலம் விருத்தியாகின்றன.

பொதுவாக, உடலின் அனைத்து உள் உறுப்பு புண்கள் ஆற்றும், தாய்ப்பால் சுரப்பை ஊக்குவிக்கும் உடல் நலிவை போக்கி, உடலை உரமாக்கும், ஆண்மையை அதிகரிக்கச் செய்யும்.

கிழங்கின் பயன்கள்:

பூப்பருவம் வந்த இளம் பெண்கள் சிலர், இரத்தச் சோகை நோயால் உடல் மெலிந்து காணப்படுவர். அதன் காரணமாக, வெள்ளைப் படுதல், உடலின் உட்சூடு, மார்பகங்கள் சரியான வளர்ச்சியின்மை மற்றும் தலைமுடி உதிர்தல் போன்ற உடல்நலக்கேடுகள் உண்டாகலாம். அவற்றுக்கெல்லாம் அரு மருந்துதான் தண்ணீர்விட்டான் கிழங்கு பானம்.

தண்ணீர்விட்டான் கிழங்கின் பானம்:

தண்ணீர்விட்டான் கிழங்கின் சாறு எடுத்து, அத்துடன் சிறிது வெல்லம் சேர்த்து பானமாகப் பருகி வர, மகப்பேறானப் பெண்களின் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கும்.

இளைத்த உடலை பூரிக்க வைக்கும், பெண்களுக்கு வரும் நீர்க்கட்டு மற்றும் வயிற்றின் எரிச்சலைப் போக்கும் தன்மை உடையது.

திருமணமானப் பெண்களை அதிகம் பாதிக்கும் கர்ப்பப்பை நீர்க்கட்டிகள் காரணமாக, சினைமுட்டைகள் பெருக்கம் சீர்கெட்டு, அதன் காரணமாக கருவுருதல் தடைபடுகிறது அந்தக்கோளாறுகள் எல்லாம் சரியாக சினைமுட்டைகள் பெருக்கம் சீராக, இந்த பானமே, சிறந்த தீர்வாக அமைகிறது. மேலும் படிக்க...

Newsletter

துபாயில் இருந்து கோவை வந்த பயணிக்கு கொரோனா தொற்று உறுதி!

துபாயில் இருந்து கோவைக்கு வந்த அரியலூரை சேரà...

திருப்பூரில் கொரோனா தொற்றுக்கு 60 வயது மூதாட்டி பலியான சோகம்!

திருப்பூர் அனுப்பர்பாளையத்தைச் சேர்ந்தவர்...