கோவை - செங்கல்பட்டு இடையே சிறப்பு கட்டண ரயில் அறிவிப்பு

கோவை : பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கோவை - செங்கல்பட்டு இடையே சிறப்பு கட்டண ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கோவை : பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கோவை - செங்கல்பட்டு இடையே சிறப்பு கட்டண ரயிலை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- ரயில் எண் 06067, செங்கல்பட்டு - கோவை இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரயில், 20, 25, 27, 29 மற்றும் ஜனவரி 1, 3, 5, 8, 10, 15, 19 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டில் இருந்து மாலை 06.30 மணிக்குப் புறப்படுகிறது. மறுநாள் இந்த ரயில் காலை 06.55 மணிக்கு கோவையை வந்தடைகிறது.

ரயில் எண் 06068, கோவை - செங்கல்பட்டு இடையே சிறப்பு கட்டண சிறப்பு ரயில், 19, 24, 26, 28, 31 மற்றும் ஜனவரி 2, 4, 7, 9, 14, 18 ஆகிய தேதிகளில் கோவையில் இருந்து இரவு 10.00 மணிக்கு புறப்படுகிறது. மறுநாள் இந்த ரயில் காலை 09.15 மணிக்கு வந்தடைகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான முன்பதிவு நாளை காலை 08 மணி முதல் தொடங்குகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...