நாளை முதல் 18-ம் தேதி வரை கோவை - சேலம் இடையிலான ரயில்சேவை ரத்து

கோவை : ஈரோடு - திருப்பூர் இடையே மேற்கொள்ளப்படும் பொறியியல் பணிகள் காரணமாக, நாளை முதல் 18-ம் தேதி வரையில் சேலம் மார்க்கமாக இயங்கும் ஒருசில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கோவை : ஈரோடு - திருப்பூர் இடையே மேற்கொள்ளப்படும் பொறியியல் பணிகள் காரணமாக, நாளை முதல் 18-ம் தேதி வரையில் சேலம் மார்க்கமாக இயங்கும் ஒருசில ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- ரயில் எண் : 66602/03 கோவை - சேலம் - கோவை இடையிலான பயணிகள் ரயில், 08-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை (11 நாட்களுக்கு) ரத்து செய்யப்பட்டுள்ளது. 

ரயில் எண் : 56713 திருச்சி ரயில்நிலையம் - பாலக்காடு டவுன் ரயிலானது, 08, 10 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கரூர் - ஈரோடு இடையே சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தப்படும்.

ரயில் எண் : 56713 திருச்சி ரயில்நிலையம் - பாலக்காடு டவுன் ரயிலானது, 9, 11,12, 13, 14 மற்றும் 17 ஆகிய தேதிகளில் கரூர் - ஈரோடு இடையே சுமார் அரை மணிநேரம் நிறுத்தி வைக்கப்படும்.

ரயில் எண் : 22619 பிலாஷபூர் - திருநெல்வேலி ரயிலானது, வரும் 12-ம் தேதி ஜோலார்பேட்டை - ஈரோடு இடையே சுமார் 40 நிமிடங்கள் நிறுத்தி வைக்கப்படும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...