சபரிமலை பக்தர்களின் வசதிக்காக சிறப்பு ரயில் இயக்கம் : நாளை முதல் முன்பதிவு தொடக்கம்

சேலம் : கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், ஐய்யப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலைக்கு கொல்லம் - ஐதராபாத் சிறப்பு கட்டண ரயில் விடப்பட்டுள்ளது.

சேலம் : கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில், ஐய்யப்ப பக்தர்களின் வசதிக்காக சபரிமலைக்கு கொல்லம் - ஐதராபாத் சிறப்பு கட்டண ரயில் விடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக சேலம் தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது :- ரயில் எண் 07110 கொல்லம் - ஐதராபாத் சிறப்பு கட்டண ரயில், கொல்லத்தில் இருந்து டிச., 08-ம் தேதி அதிகாலை 3 மணிக்கு புறப்படுகிறது. காயான்குளம் வழியாக செல்லும் இந்த ரயில், கோட்டயம், ஆலுவா, கோவை, ஈரோடு, சேலம், காட்பாடி, குண்டூர், நெல்லூர், விஜயவாடா, வாராங்கல் ஆகிய பகுதிகளைக் கடந்து மறுநாள் 10.30 மணிக்கு ஐதராபாத் செல்கிறது. 

 

ரயில் எண் 07506 கொல்லம் - திருப்பதி சிறப்பு கட்டண சிறப்பு ரயில், 9-ம் தேதி கொல்லத்தில் இருந்து காலை 06.45 மணிக்கு புறப்படுகிறது. காயான்குளம் வழியாக செல்லும் இந்த ரயில், கோட்டயம், ஆலுவா, கோவை, ஈரோடு, சேலம், காட்பாடி, சித்தூரைக் கடந்து நள்ளிரவு 11.55 மணிக்கு திருப்பதி சென்றடைகிறது. இந்த ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை 8 மணி முதல் தொடங்குகிறது. 

கார்த்திகை, மார்கழி மாதத்தையொட்டி, சபரிமலைக்கு செல்லும் பக்தர்களின் கூட்டம் அலைமோதும் என்பதால், நவ.,16-ம் தேதி முதல் டிச.26-ம் தேதி வரையில் சுமார் 260 சிறப்பு ரயில்கள் விடப்பட்டுள்ளன. இதில், சென்னை - கொல்லம் பிராந்தியத்தில் இருந்து புறப்படும் ரயில், கோவை, எர்ணாகுளம், திருச்சி, மதுரை, பூணலூர் போன்ற முக்கிய பகுதிகள் வழியாக 244 சிறப்பு ரயில்கள் செல்கின்றன. 

சபரிமலை பக்தர்களின் வசதிக்காக ரயில் எண். 12697/12698 சென்னை - திருவனந்தபுரம் - சென்னை வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் மற்றும் எண் : 22653 திருவனந்தபுரம் - நிஜாமுதீன் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில்கள் நாளை முதல் ஜனவரி 21-ம் தேதி வரை செங்கனூரில் தற்காலிகமாக நிறுத்தி இயக்கப்படும், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...