கோவையில் ஜூன் 26 முதல் பைக்கில் செல்வோருக்கு புது கட்டுப்பாடு அமல்!

விபத்து மரணங்களை தவிர்க்கும் பொருட்டு, கோவையில் வரும் 26 ஆம் தேதி முதல் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தின் பின்னால் அமர்ந்து வரும் நபர்கள் மீதும் மோட்டார் வாகன சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவையில் வரும் ஜூன் 26 ஆம் தேதி முதல் இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருப்பர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. 

இருசக்கர வாகன விபத்துகளில் உயிரிழப்பவர்கள் குறித்து விரிவாக போலீசார் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் பின்னால் அமர்ந்து செல்பவர்கள் ஆகியோர் உயிரிழக்கும் சதவீதம் அதிகமாக உள்ளது. 

எனவே 100% விபத்துகளை தடுக்கும் பொருட்டு பாதுகாப்பான சாலை பயணத்தை உறுதி செய்யும் நோக்குடன் இரு சக்கர வாகன வாகனங்களை ஓட்டிச் செல்லும் நபர்கள் மட்டுமின்றி பின்னால் அமர்ந்து செல்லும் நபர்களும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற விதிமுறையை 100 சதவீதம் செயல்படுத்த மாநகர போலீசார் திட்டமிட்டுள்ளனர். 

அதன்படி வரும் 26 ஆம் தேதி முதல் அனைத்து இடங்களிலும் வாகன சோதனை மேற்கொள்ள மேற்கொள்ளப்பட உள்ளது. இதில் தலைக்கவசம் அணியாமல் வாகனத்தின் பின்னால் அமர்ந்து வரும் நபர்கள் மீது மோட்டார் வாகன சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

அவர்களுக்கு ஒரு வார காலத்திற்கு போக்குவரத்து பூங்காவில் தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

எனவே வாகன ஓட்டிகள் பின்னால் அமர்ந்திருக்கும் நபர்களும் தலைக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...