வால்பாறை பகுதியில் வரும் 12ஆம் தேதி மின்தடை ஏற்படும் - மின்சார துறை அறிவிப்பு

ஐயர் பாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வால்பாறை வட்டார பகுதிகளில் மின் பாதைகளின் அருகேயுள்ள மரங்களின் கிளைகளை அகற்றும் பணிகள் காரணமாக வரும் ஜூன் 12 ஆம் தேதி திங்கட்கிழமை, ஐயர்பாடி, ரொட்டிகடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, சேக்கல்முடி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோகம் தடைபடும் என அறிவிப்பு.



கோவை: வால்பாறை பகுதியில் மின் பாதைகளில் உள்ள மரக்கிளைகள் அகற்றும் பணியின் காரணமாக வரும் 12ஆம் தேதி மின்தடை ஏற்படும் என மின்சார துறை அறிவித்துள்ளது. 

இதுதொடர்பாக வால்பாறை மின்சார துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது, 

ஐயர் பாடி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட வால்பாறை வட்டார பகுதிகளில் வரும் ஜூன் 12 ஆம் தேதி திங்கட்கிழமை, மின் பாதைகளில் அருகே உள்ள மரங்களின் கிளைகளை அகற்றும் பணிகள் நடைபெறவுள்ளது. 

இதன் காரணமாக அன்றைய தினம், ஐயர்பாடி, ரொட்டிகடை, அட்டகட்டி, வாட்டர்பால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, சேக்கல்முடி, சின்னக்கல்லார், பெரிய கல்லார், ஹைஃபாரஸ்ட், சோலையார் நகர், முடீஸ், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி, முதலிய பகுதிகளில் மின்விநியோகம் தடைபடும்.

மின்சார துறையின் இந்த நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். 

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...