கோவையில் மே 1ம் தேதி மதுக்கடைகள் மூடல் - மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி உத்தரவு!

உலகம் முழுவதும் மே.1ம் தேதி உழைப்பாளர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, நாளை கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மதுபானக் கடைகளையும் மூட வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி உத்தரவிட்டுள்ளார்.


கோவை: உலகம் முழுவதும் மே.1ம் தேதி உழைப்பாளர் தினமாகக் கடைபிடிக்கப்படுகிறது. அரசு விடுமுறை தினமான அன்று தமிழகத்தில் மதுக்கடைகளை மூட அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழ்நாடு மாநில வாணிப கழகம் மதுபானக் கடைகள், அதனுடன் இணைக்கப்பட்ட மதுக்கூடங்கள், அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ்மன்றங்களில் செயல்படும் மதுக்கூடங்கள், நட்சத்திர ஹோட்டல்களின் செயல்படும் மதுக்கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டலில் செயல்படும் மதுக்கூடம்

மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் அனைந்தும் வரும் 01.05.2023 (திங்கட்கிழமை) அன்று மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மே தினம் Dry Day கடைபிடிப்பதால் விதிமுறைகளுக்கு முரணாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது, சட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...