கலைத்துறையில் சாதித்தவரா நீங்கள்..? - விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்கள் அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தெரிவித்துள்ளார்.


கோவை: கலைத்துறையில் சாதனை படைத்த கலைஞர்கள், அரசு விருது பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

தமிழ்நாட்டின் கலை பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலை பண்புகளை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றம் மூலமாக ஆண்டுதோறும் 15 கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிட தமிழ்நாடு அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

கோயம்புத்தூர் மாவட்ட அளவில் இசை நாட்டியம், ஓவியம், நாட்டுப்புறக் கலைகள், நாடகம், கருவியிசையில் சாதனை படைத்த கலைஞர்களில் 18 வயது அதற்குட்பட்டோருக்கு "கலை இளமணி" விருதும், 19 வயது முதல் 35 வயது பிரிவினருக்கு "கலை வளர்மணி" விருதும், 36 வயது முதல் 50 வயது பிரிவினருக்கு 'கலை சுடர்மணி" விருதும், 51 வயது முதல் 65 வயது பிரிவினருக்கு "கலை நன்மணி" விருதும், 65 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு 'கலை முதுமணி" விருதும் வழங்கப்பட உள்ளன.

கோயம்புத்தூர் மாவட்ட கலைஞர்கள் விருது பெற தங்களது சுய விவர குறிப்புடன் வயது மற்றும் பணியறிவு ஆகியவற்றை குறிப்பிட்டு நிழற்படம் இணைத்து உரிய சான்றுகளுடன் உதவி இயக்குநர், கலை பண்பாட்டுத்துறை, மண்டல அலுவலகம், செட்டிபாளையம் பிரிவு சாலை, மலுமிச்சம்பட்டி அஞ்சல், கோயம்புத்தூர்-641050 என்ற முகவரிக்கு 02.05.2023-க்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விவரம் வேண்டுவோர் 0422 2610290 அல்லது 9442213884 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...