போலி மின் மீட்டரை பொருத்தி வசூல் வேட்டை - பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க மின்வாரியம் அறிவுரை!

திருப்பூர் அடுத்த கொசவம்பாளையம் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது போலி மின் மீட்டரை பொருத்தி மோசடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் மோசடி நபர்களிடம் கவனமாக இருக்கவும், புகார் அளிக்கவும் மின்சார வாரியம் அறிவுறுத்தி உள்ளது.


திருப்பூர்: போலி மின் மீட்டரை பொருத்தி தாராபுரம், பல்லடம், அவிநாசியில் வசூல் வேட்டையில் ஈடுபடும் நபர்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது

கொசவம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் தையல் தொழிலாளியான இவர், தனது வீட்டுக்கு மின் இணைப்பு கோரி பல்லடம் மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். இதற்காக மின்வாரிய அதிகாரிகள் தடையின்மை சான்று கேட்டிருந்தனர்.

இந்நிலையில் அவரது வீட்டிற்கு மின்வாரிய ஊழியர் போல் வந்த ஒருவர் மின் மீட்டர் ஒன்றை பொருத்திவிட்டு 6000 ரூபாய் செலுத்துமாறு கூறியுள்ளார். மின்வாரியத்தின் கணக்கெடுக்கும் அட்டையை அந்த நபரிடம் வாங்கியதோடு ரசீதை அலுவலகத்தில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு கூறிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக மின்வாரிய அலுவலகத்திற்கு சென்ற மணிகண்டன் ரசீது கேட்டுள்ளார். மின்வாரிய அதிகாரிகள் விளக்கம் அளித்த பின்னரே, தான் ஏமாற்றப்பட்டதை மணிகண்டன் உணர்ந்துள்ளார்.

இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பாக பல்லடம் காவல் நிலையத்தில் மணிகண்டன் புகார் அளித்துள்ளார் அவிநாசி, தாராபுரத்திலும் இதேபோல மோசடி நடைபெற்று உள்ளதாக காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தாராபுரம் மின்சார வாரிய செயல் பொறியாளர் பாலன் கூறியதாவது, மின்வாரியத்தில் பணியில் இல்லாத நபர்கள் தன்னை மின்சார வாரிய அலுவலர் எனக்கூறி மின் இணைப்பு பெற வேண்டி விண்ணப்பித்து நிலுவையில் உள்ள விண்ணப்ப தாரர்களிடம் மின் மீட்டர் ஒதுக்கப்பட்டதாக நேரில் தெரிவித்து மோசடி செயலில் ஈடுபட்டு வருகின்றனர்

இது போன்று மோசடி நபர்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம். தாராபுரம் கோட்டத்தில் உள்ள அனைத்து மின் நுகர்வோர்களும் தங்களுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகளில் பொருத்தப்பட்ட மின் மீட்டர்களை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும்.

மின் மீட்டர் பொருத்தித் தருவதாக சந்தேகப்படும்படி யாரேனும் வந்தால், தாராபுரம் செயற்பொறியாளர் 944 58 51 562 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...