கோவையில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: நாளை (செப்.4) போக்குவரத்து மாற்றம் அறிவிப்பு..!

விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் காரணமாக காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் லாரிகள் இயக்க தடை மற்றும் ஊர்வல பாதையில் வாகனங்கள் நிறுத்துவதை தவிர்க்க வியாபாரிகளுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.


கோவை: கோவை மாநகரில் நாளைய தினம், செப்டம்பர் 4 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறவுள்ளதால், பல்வேறு இடங்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை மாவட்டத்தில் பொதுமக்கள், கட்சிகள், இந்து முன்னணி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சார்பில் ஏராளமான இடங்களில் விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு செய்யப்பட்டன.

அவ்வாறு வைத்து வழிபாடுசெய்யப்பட்ட விநாயகர் சிலைகள், நாளை நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளதால், சில இடங்களில் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், கோவை மாநகரில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) விநாயகர் சிலை ஊர்வலம் செல்லவிருப்பதால் காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.



உக்கடம் பேருந்து நிலையத்தில் இருந்து பேரூர் மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் பேரூர் பைபாஸ் ரோடு - செல்வபுரம் - சிவாலயா தியேட்டர் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும்.

காந்திபுரம் மற்றும் டவுன்ஹாலில் இருந்து வைசியாள் வீதி, சலிவன் வீதியில் செல்லும் வாகனங்கள் உக்கடம் சென்று வலதுபுறம் திரும்பி பேரூர் பைபாஸ் ரோடு - சிவாலயா தியேட்டர் சந்திப்பு வழியாக செல்வபுரம் செல்ல வேண்டும்.

உக்கடம் வழியாக திருச்சி ரோடு மார்க்கமாக செல்லும் அனைத்து வாகனங்களும் சுங்கம் பைபாஸ் வழியாக சுங்கம் சந்திப்பை அடைந்து திருச்சி சாலையில் செல்ல வேண்டும்.

உக்கடம் வழியாக மேட்டுப்பாளையம் சாலை மற்றும் தடாகம் சாலை செல்லும் அனைத்து வாகனங்களும் ஒப்பணக்கார வீதி - ராஜ வீதி - ரயில் நிலையம் வழியாக காந்திபுரம் சென்று செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்

தடாகம் ரோட்டில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் வெங்கிட்டாபுரம் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி என்.எஸ்.ஆர். ரோடு வழியாக மேட்டுப்பாளையம் ரோடு ஏ.ஆர்.சி. சந்திப்பு சென்று சிவானந்தா காலனி வழியாக செல்ல வேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் சங்கனூர் பாலம் சந்திப்பில் இடது புறம் திரும்பி கணபதி - காந்திபுரம் வழியாக செல்லவேண்டிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

மேட்டுப்பாளையத்தில் இருந்து நகருக்குள் வரும் வாகனங்கள் விநாயகர் சிலை ஊர்வலம் வடகோவை மேம்பாலத்தை கடந்து சென்ட்ரல் தியேட்டரை கடந்த பிறகு வடகோவை மேம்பாலம் வழியாக காந்திபுரம் செல்ல வேண்டும்.

பேரூரில் இருந்து நகருக்குள் வரும் அனைத்து பேருந்துகளும் மற்றும் வாகனங்களும் பேரூர் ரோடு, செல்வபுரம் மேல்நிலைப் பள்ளி அருகில் வலது பக்கம் திரும்பி பேரூர் புறவழிச்சாலை வழியாக உக்கடம் அடைந்து செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல வேண்டும்.

விநாயகர் ஊர்வலத்தை முன்னிட்டு நாளை காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நகருக்குள் லாரிகள் இயக்க தடை விதிக்கப்படுகிறது.

மேலே கண்ட சாலைகள் வழியாக விநாயகர் சிலை ஊர்வலம் செல்ல இருப்பதால் ஊர்வலப்பாதையில் இருக்கும் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை மேற்படி பாதையில் நிறுத்துவதை தவிர்த்து மேற்கண்ட போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அந்த செய்தி குறிப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...