கோவை மாவட்ட ஆட்சியர் தலைமையில் 'மக்கள் தொடர்பு முகாம்'..!

பேரூர் வட்டம், மாதம்பட்டி கிராமத்தில் வரும் 20-ம் தேதி காலை 10-மணி அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளதாக, மாவட்ட நிர்வாகம் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.


கோவை: கோவை மாதம்பட்டி கிராமத்தில் 20-ம் தேதி மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், பேரூர் வட்டம், மாதம்பட்டி கிராமத்தில் வரும் 20-ம் தேதி காலை 10-மணி அளவில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், அக்கிராமத்தில் கோவை தெற்கு வருவாய் கோட்டாட்சியர் 10-ம் தேதி காலை 10.30-மணியளவில் மாதம்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் பொது மக்களிடம் மனுக்களை பெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதனைத் தொடர்ந்து துறை அலுவலர்கள் மூலம் விசாரணை செய்து 20ம் தேதி நடைபெற உள்ள முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...