தமிழகம் முழுவதும் 1-லட்சம் இடங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம்..!

தமிழகம் முழுதும் நாளை ஒரு லட்சம் இடங்களில், 31-வது சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததால் மீண்டும் மெகா தடுப்பூசி முகாமை நடத்த மக்கள் நல்வாழ்வுத்துறை முடிவு செய்துள்ளது.


கோவை: தமிழகம் முழுவதும் நாளை(ஜூலை 10), ஒரு லட்சம் இடங்களில், 31-வது சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது.

இந்தியாவில், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தடுப்பூசிகள் செலுத்தும் பணி, 2021-ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படுகிறது.

தற்போது 12-வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. தமிழகத்தில், 90- சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தடுப்பூசி போட்டு விட்டதால், வாரந்தோறும் நடந்து வந்த மெகா தடுப்பூசி முகாம் நிறுத்தப்பட்டது.

வழக்கமான மையங்களில் மட்டும், தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெறுகிறது. தற்போது தொற்று மீண்டும் அதிகரிக்க துவங்கியதை தொடர்ந்து, மாதத்தில் ஒரு நாள் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. அதன்படி, 31-வது மெகா தடுப்பூசி முகாம், ஒரு லட்சம் இடங்களில் நாளை நடைபெற உள்ளது.

இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி, ஆறு மாதங்கள் நிறைவடைந்தவர்கள், 'பூஸ்டர் டோஸ்' தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முன்கள பணியாளர்கள், 60-வயதுக்கு மேற்பட்டோருக்கு, இந்த முகாமில் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியும். மற்றவர்கள் தனியார் மருத்துவமனையில் கட்டணம் செலுத்தி, பூஸ்டர் தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...