ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு தேதியில் மாற்றம்: டிஎன்பிஎஸ்சி (TNPSC) செயலாளர் அறிவிப்பு!

ஜூன் 26 ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தேர்வு ஜூலை 2 ஆம் தேதி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

கோவை: ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு தேதி மாற்றி அமைக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் இன்று (ஏப்.28) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கடந்த 4ஆம் தேதி அன்று ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான தேர்வு குறித்த அறிவிப்பு வெளியானது.

அந்த அறிவிப்பில், இந்த தேர்வு வரும் ஜூன் 26 ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. எனினும், தற்போது இந்தத் தேர்வு ஜூலை 2 ஆம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகல் நடைபெறும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...