நாளை ஏப்ரல் 14., மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு மதுபான கடைகளுக்கு தடை - கோவை மாவட்ட ஆட்சியர்

நாளை (14.04.2022) மகாவீர் ஜெயந்தி தினம் கொண்டாடப்பட உள்ளதால், கோவை மாவட்டத்தில் மதுபான கடைகள் செயல்பட தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: நாளை (14.04.2022) மகாவீர் ஜெயந்தி தினம் கொண்டாடப்பட உள்ளதால், கோவை மாவட்டத்தில் மதுபான கடைகள் செயல்பட தடை விதித்து மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ். சமீரன் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாளை மகாவீர் ஜெயந்தி தினம் கொண்டாட உள்ளதால், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து தமிழக மாநில வாணிப கழகம் மதுபான கடைகள், அதனுடன் இணைக்கப்பட்ட மதுபானக் கூடங்கள், அனைத்து பொழுதுபோக்கு மனமகிழ் மன்றம் போன்ற கிளப்புகளில் செயல்படும் மதுபானக் கூடங்கள், தமிழ்நாடு ஹோட்டல் மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட அயல்நாட்டு மதுபான வகைகள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் நாளை (வியாழக்கிழமை) மூட உத்தரவிடப்பட்டுள்ளது, என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், விதிமுறைகளுக்கு முரணாக மதுபானங்கள் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும், எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...