நீங்க இன்னும் தடுப்பூசி போடவில்லையா? அப்போ நாளை உங்களுக்கு ஒரு நல்வாய்ப்பு.!!

சனிக்கிழமை (05.03.2022) நடைபெறும் கொரோனா தடுப்பூசி முகாமில் ஓமைக்ரான்‌ வகை கோவிட்‌ நோய்த்‌ தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளத் தகுதியுடைய நபர்கள்‌ அனைவரும்‌ கட்டாயம்‌ தடுப்பூசி எடுத்துக்‌ கொள்ள மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா வேண்டுகோள் விடுத்துள்ளார்‌.


கோவை: தமிழக அரசு உத்தரவின்படி கோவிட்‌-19 23-வது மெகா தடுப்பூசி முகாம்‌ 05.03.2022 அன்று காலை 9.00 மணி முதல்‌ மாலை 5.00 மணி வரை கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதியில்‌ 226 மையங்களில்‌ நடைபெறவுள்ளது.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ தெரிவிக்கையில்‌, “கோயம்புத்தூர்‌ மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ 98% மேல்‌ முதல்‌ தவணை தடுப்பூசி செலுத்திக்‌ கொண்டுள்ளனார். கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ 18 வயதிற்கு மேல்‌ 98,000 நபாகள்‌ முதல்‌ தவணை தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளாமல்‌ உள்ளனர்‌.

எனவே இந்த 23-வது மெகா கோவிட்‌ முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளுமாறும்‌, மேலும்‌, 2,08,000 நபர்கள்‌ இரண்டாம்‌ தவணை தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளத் தகுதியுடையவர்களாக உள்ளனர்‌. (கோவிஷீல்டு முதல்‌ தவணை செலுத்தி 84 நாட்கள்‌ முடிவடைந்தவர்கள்‌ மற்றும்‌ கோவேக்சின்‌ 28 நாட்கள்‌ முடிவடைந்தவர்கள்‌) தடுப்பூசி இரண்டாம்‌ தவணை செலுத்தியவர்களுக்குத் தொற்று தீவிரமடையாமல்‌ தடுக்கப்படுகிறது. மேலும்‌ 100 சதவீத பாதுகாப்பும்‌ கிடைக்கப்பெறுகிறது.

பொதுச் சுகாதார இயக்குனரகம்‌ தகவலின்படி, கடந்த மூன்று மாதங்களில்‌ இறந்தவர்களில்‌ 95 சதவீதம்‌ பேர் தடுப்பூசி செலுத்தாதவர்கள்‌ ஆவர்‌. மாநகராட்சி ஆணையாளர்‌ அறிவுரையின்படி, முன் களப்பணியாளர்கள்‌, இணைநோயுடன்‌ உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதல்‌ தவணை தடுப்பூசி செலுத்தாத நபர்கள்‌ மற்றும்‌ இரண்டாம்‌ தவணை தடுப்பூசியைச் செலுத்த வேண்டிய நாட்களைக் கடந்த நபர்களுக்கு வீடுகளுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

அதேபோல்‌, 2-ம்‌ தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள்‌ கடந்தவர்கள்‌, முன்களப்பணியாளர்கள்‌, 60 வயதைக் கடந்தவர்கள்‌ அனைவரும்‌ முன்னெச்சரிக்கை தடுப்பூசி (Precautionary Booster Dose) இந்த முகாமில்‌ செலுத்திக்‌ கொள்ளலாம்‌. மேலும்‌, நாளொன்றுக்கு கொரோனா பாதிப்பு இரு மடங்கு அதிகமாக இருப்பதால்‌ இந்த வைரஸ்‌ தொற்றிலிருந்து தங்களை முழுவதும்‌ பாதுகாத்துக்கொள்ள முதல்‌ தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளாதவர்களும்‌ மற்றும்‌ இரண்டாம்‌ தவணை தடுப்பூசி செலுத்தத் தகுதியுடையவர்கள்‌ அனைவரும்‌ 100 சதவீத பாதுகாப்பைப் பெற முகாமில்‌ கலந்து கொண்டு பயன்பெறுமாறு” மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...