நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்குப்பதிவின்போது ஆள்‌ மாறாட்டங்களைத்‌ தவிர்க்க வாக்களிப்பதற்கான 11 அடையாள ஆவணங்கள் வெளியீடு..!

இந்த 11 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்‌ என தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ மற்றும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ தகவல் தெரிவித்துள்ளார்‌.


கோவை: கோவை மாநகராட்சியில்‌ 19.02.2022 அன்று நடைபெறவிருக்கும்‌ நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலில் வாக்குப்பதிவின்போது ஆள்‌ மாறாட்டங்களைத்‌ தவிர்க்க குறிப்பிட்டுள்ள 11 அடையாள ஆவணங்களில்‌ ஏதாவது ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்‌ என தேர்தல்‌ நடத்தும்‌ அலுவலர்‌ மற்றும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்௧கரா இ.ஆ.ப., அவர்கள்‌ தகவல்‌ தெரிவித்தார்.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சியில்‌ 19.02.2022 அன்று மாமன்ற உறுப்பினர்‌ பதவிக்காக நடைபெறும்‌ நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தல்‌ 2022ல்‌ தமிழ்நாடு மாநில தேர்தல்‌ ஆணையத்தால்‌ வழங்கப்பட்ட வாக்குச்சாவடி சீட்டு (Booth Slip) உள்ளவர்களும்‌, அல்லது வாக்குச்சாவடி சீட்டு இல்லாதவர்களும்‌ வாக்காளர்‌ அடையாள அட்டை (EPIC), அல்லது தமிழ்நாடு மாநில தேர்தல்‌ ஆணையம்‌ அனுமதித்துள்ள கீழ்க்காணும்‌ 11 அடையாள ஆவணங்களில்‌ ஏதாவது ஒன்றைக்‌ காண்பித்து வாக்களிக்கலாம்‌.

1) ஆதார்‌ அட்டை

2) மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்‌ திட்டத்தின்‌ பணி அட்டை

3) புகைப்படத்துடன்‌ கூடிய வங்கி அஞ்சலக கணக்குப்‌ புத்தகங்கள்‌

4) தொழிலாளர்‌ நல அமைச்சக திட்டத்தின்கீழ்‌ வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மாட்‌ காடு

5) ஓட்டுநர்‌ உரிமம்‌ (டாங்ராத ப௦னா௦6)

6) நிரந்தர கணக்கு அட்டை (Pan Card)

7) தேசிய மக்கள்‌ பதிவேட்டின்கீழ் இந்திய தலைமைப்‌ பதிவாளரால்‌ வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு (Smart Card)

8) இந்திய கடவுச்சீட்டு (Indian passport)

9) புகைப்படத்துடன்‌ கூடிய ஓய்வூதிய ஆவணம்‌

10) மத்திய மாநில அரசு, மத்திய/மாநில அரசின்‌ பொதுத்துறை நிறுவனங்களால்‌/ வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால்‌ தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன்‌ கூடிய பணி அடையாள அட்டைகள்‌

11) பாராளுமன்ற/சட்டமன்ற/சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை

எனவே, நடைபெறவிருக்கும்‌ நகர்ப்புற உள்ளாட்சி சாதாரண தேர்தலில்‌ வாக்குப்பதிவின்போது ஆள்‌ மாறாட்டங்களைத்‌ தவிர்க்க மேற்காணும்‌ அடையாள ஆவணங்களில்‌ ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம்‌ என தேர்தல் நடத்தும்‌ அலுவலர்‌ மற்றும்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ தெரிவித்துள்ளார்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...