கோவையில் நாளை, ஜனவரி 20 ஆம் தேதி கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முகாம் - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

நாளை, ஜனவரி 20 ஆம் தேதி அனைத்து வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மாநகராட்சியில் உள்ள அனைத்து நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 9 மணி முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் நாளை கொரோனா பூஸ்டர் தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் "மருத்துவ பணியாளர்கள் சுகாதாரப் பணியாளர்கள் முன் களப்பணியாளர்கள் மற்றும் 60 வயது இருக்கும் மேற்பட்ட இணை நோய் (நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம்) உள்ளவர்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை கொரோனா தடுப்பு ஊசி வழங்கப்பட்டு வருகிறது.

இதற்காக, தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வியாழக்கிழமைகளில் சிறப்பு முகாம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்தில் நாளை அனைத்து வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனை, இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மாநகராட்சியில் உள்ள அனைத்து நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகிய இடங்களில், காலை 9 மணி முதல் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது. மேலும், இந்த மையத்தில் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசிகளும் செலுத்தப்படும்.

முன்னெச்சரிக்கை (பூஸ்டர்) தடுப்பு ஊசி செலுத்துவதற்கு இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டு 9 மாதங்கள் நிறைவடைந்து இருக்க வேண்டும். இதுவரை, கோவையில் 10,478 தகுதி வாய்ந்த முன்கள பணியாளர்கள் மட்டும் 60 வயதிற்கு மேற்பட்டோர் முன்னெச்சரிக்கை தடுப்பு ஊசி பெற்றுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், தகுதியுள்ள அனைவரும் தவறாது முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்தி பயனடைய வேண்டும். மேலும், சனிக்கிழமை 19 வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...