கோவை மாநகராட்சியில் இணை நோயுடன்‌ உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த நடவடிக்கை..!!

இணை நோயுடன்‌ உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள்‌ 0422-2302323 என்ற எண்ணில்‌ தொடர்பு கொண்டு தங்களுடைய விவரங்களை பதிவு செய்தால்‌ அவர்களின்‌ இல்லங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்‌.


கோவை: இணை நோயுடன்‌ உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (Precautionary Booster Dose) செலுத்த மாநகராட்சியின்‌ சார்பில்‌ சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுன்கரா இ.ஆ.ப தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை (Precautionary Booster Dose) செலுத்திக்‌ கொள்ள இரண்டாம்‌ தவணை தடுப்பூசி செலுத்தி 9 மாதங்கள்‌ அதாவது 39 வாரங்கள்‌ கடந்த நபர்கள்‌ மட்டுமே தகுதியுடையவர்கள்‌.

இணை நோயுடன்‌ உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்கள்‌ 0422-2302323 என்ற எண்ணில்‌ தொடர்பு கொண்டு தங்களுடைய விவரங்களை பதிவு செய்தால்‌ அவர்களின்‌ இல்லங்களுக்கே சென்று தடுப்பூசி செலுத்தப்படும்‌.

மேலும்‌, 60 வயதைக் கடந்த முதல்‌ தவணை தடுப்பூசி செலுத்தாத நபர்கள்‌ மற்றும்‌ இரண்டாம்‌ தவணை தடுப்பூசியை செலுத்த வேண்டிய நாட்களை கடந்த நபர்களும்‌ இந்த எண்ணில்‌ தொடர்பு கொண்டு பதிவு செய்தால்‌, அவர்களுக்கும்‌ இல்லங்களிலேயே கோவிட்‌ தடுப்பூசி செலுத்தப்படும்‌ என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப. அவர்கள்‌ தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...