ஜன.10 வரை புதிய கட்டுப்பாடுகளுடன் நீட்டிப்பு: தமிழகத்தில் என்னென்ன கட்டுப்பாடுகள்? முழு விவரம்..!

தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து ஜன.10-ம் தேதிவரை புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை இன்று (டிச.31) முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.



சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதையடுத்து ஜன.10-ம் தேதிவரை புதிய கட்டுப்பாடுகள் குறித்த அறிவிப்பை இன்று (டிச.31) முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார்.

இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று பிறப்பித்துள்ள உத்தரவு:-

தமிழ்நாட்டில்‌, கொரோனா நோய்த்‌ தொற்றுப்‌ பரவலைக்‌ கட்டுப்படுத்தும்‌ வகையில்‌ அரசு ஆணை எண்‌.882 வருவாய்‌ மற்றும்‌ பேரிடர்‌ மேலாண்மைத்‌ துறை, நாள்‌ 15.12.2021-ன்படி, 31.12.2021 வரை தளர்வுகளுடன்‌ ஊரடங்கு நடைமுறையில்‌ இருந்து வருகிறது.

பண்டிகைக்‌ காலங்களில்‌, கொரோனா நோய்த்‌ தொற்று பரவலைத்‌கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்‌ குறித்தும்‌, தற்போது தமிழ்நாட்டில்‌ பரவி வரும்‌ உருமாறிய கொரோனா ஒமைக்ரான்‌ வைரஸ்‌ நோயைக்‌ கருத்தில்‌ கொண்டும்‌ தடுப்பூசி செலுத்தும்‌ பணியினை விரைவுபடுத்தவும்‌ தலைமைச்‌ செயலகத்தில்‌ மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ 31.12.2021 அன்று à®†à®²à¯‹à®šà®©à¯ˆà®•்‌ கூட்டம்‌ நடைபெற்றது.

இதில்‌, நீர்வளத்‌துறை அமைச்சர்‌ துரைமுருகன்‌, நகர்ப்புற வளர்ச்சித்‌துறை அமைச்சர்‌ கே.என்‌.நேரு, உயர்கல்வித்‌ துறை அமைச்சர்‌ ௧. பொன்முடி, பொதுப்பணித்‌ துறை அமைச்சர்‌ எ.வ. வேலு மற்றும்‌ மருத்துவம்‌, மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை அமைச்சர்‌ மா. சுப்பிரமணியன்‌ மற்றும்‌ உயர்‌ அதிகாரிகள்‌ கலந்து கொண்டனர்‌.

ஒன்றிய அரசின்‌ உள்துறை அமைச்சகத்தின்‌ 27.12.2021 நாளிட்ட அறிக்கையின்படி கொரோனா நோய்த்‌ தடுப்பு கட்டுப்பாடுகள்‌ 31.1.2022 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதனைத்‌ தொடர்ந்து கொரோனா நோய்த்‌ தொற்று பரவலைத்‌ தடுக்கும்‌ நடவடிக்கைகளை மேற்கொள்ளும்‌ வகையிலும்‌, பரவி வரும்‌ உருமாறிய கொரோனா ஒமைக்ரான்‌ வைரஸ்‌ நோயைக்‌ கருத்தில்‌ கொண்டும்‌ மற்றும்‌ பொது மக்கள்‌ நலன்‌ கருதியும்‌ நடைமுறையில்‌ உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள்‌ 10.1.2022 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.

பண்டிகைக்‌ காலங்களில்‌ பொதுமக்கள்‌ ஒரே நேரத்தில்‌, ஒரே இடத்தில்‌ கூடுவதால்‌ கொரோனா நோய்த்‌ தொற்று பரவல்‌ அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவ வல்லுநர்கள்‌ தெரிவித்துள்ளதைக்‌ கருத்தில்‌ கொண்டு பொது மக்கள்‌ நலன்‌ கருதி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

1) சமுதாய, கலாச்சார மற்றும்‌ அரசியல்‌ கூட்டங்கள்‌ போன்ற பொது மக்கள்‌ கூடும்‌ நிகழ்வுகளுக்கு தற்போது நடைமுறையிலுள்ள தடை தொடரும்‌.

2) மழலையர்‌ விளையாட்டு பள்ளிகள்‌, நர்சரி பள்ளிகள்‌ செயல்பட அனுமதி இல்லை.

 

3) அனைத்து பள்ளிகளிலும்‌, 1ஆம்‌ வகுப்பு முதல்‌ 8ஆம்‌ வகுப்பு வரை 10.1.2022 முடிய நேரடி வகுப்புகள்‌ நடத்த தடை விதிக்கப்படுகிறது.

4) அனைத்து பொருட்காட்சிகள்‌ மற்றும்‌ புத்தகக்‌ கண்காட்சிகள்‌ நடத்துவது தற்போது ஒத்திவைக்கப்படுகிறது.

 

ஏற்கெனவே அனுமதிக்கப்பட்டுள்ள பின்வரும்‌ செயல்பாடுகள்‌ உரிய கட்டுப்பாடுகளுடன்‌ தொடர்ந்து அனுமதிக்கப்படும்‌.

1) 9-ஆம்‌ வகுப்பு முதல்‌ 12-ஆம்‌ வகுப்பு வரையிலான பள்ளி வகுப்புகள்‌, கல்லூரிகள்‌, தொழிற்பயிற்சி நிலையங்கள்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்படும்‌.

2) வழிபாட்டுத்‌ தலங்களைப்‌ பொறுத்தவரை தற்போது நடைமுறையிலுள்ள வழிகாட்டு நெறிமுறைகளே தொடர்ந்து கடையிடிக்கப்படும்‌.

3) உணவகங்கள்‌, விடுதிகள்‌, அடுமணைகள்‌, தங்கும்‌ விடுதிகள்‌ மற்றும்‌ உறைவிடங்களில்‌ 50% வாடிக்கையாளர்கள்‌ மட்டும்‌ அமர்ந்து உணவு அருந்த அனுமதிக்கப்படும்‌.

 

4) பொழுதுபோக்கு / கேளிக்கை பூங்காக்கள்‌ 50% வாடிக்கையாளர்களுடன்‌ செயல்பட அணுமதிக்கப்படுகிறது.

5) திருமணம்‌ மற்றும்‌ திருமணம்‌ சார்ந்த நிகழ்வுகள்‌ அதிகபட்சம்‌ 100 நபர்களுடன்‌ மட்டும்‌ நடத்த அனுமதிக்கப்படும்‌.

6) இறப்பு சார்ந்த நிகழ்வுகளில்‌ 50 நபர்களுக்கு மிகாமல்‌ அனுமதிக்கப்படும்‌.

7) துணிக்கடைகள்‌ மற்றும்‌ நகைக்கடைகளில்‌ ஒரு நேரத்தில்‌ 50% வாடிக்கையாளர்களுக்கு மிகாமல்‌ செயல்படுவதை கடை à®‰à®°à®¿à®®à¯ˆà®¯à®¾à®³à®°à¯à®•ள்‌ உறுதி செய்ய வேண்டும்‌.

8) கேளிக்கை விடுதிகளில்‌ உள்ள உடற்பயிற்சி கூடங்கள்‌, விளையாட்டுக்கள்‌, உணவகங்கள்‌ ஒரு நேரத்தில்‌ 50% வாடிக்கையாளர்களுடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

9) உடற்பயிற்சி கூடங்கள்‌ மற்றும்‌ யோகா பயிற்சி நிலையங்கள்‌ ஒரு நேரத்தில்‌ 50% வாடிக்கையாளசார்களுடன்‌ செயல்படஅனுமதிக்கப்படும்‌.

10) பொது போக்குவரத்து பேருந்துகளில்‌ உள்ள இருக்கைகளுக்கு மிகாமல்‌ பயணிகள்‌ பயணிக்க அனுமதிக்கப்படும்‌.

11) மெட்ரோ இரயிலில்‌ 50% இருக்கைகளில்‌ மட்டும்‌ பயணிகள்‌ அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும்‌.

 

12) திரையரங்கங்கள்‌ உள்ளிட்ட அனைத்து அரங்கங்களிலும்‌ (Multiplex/Cinemas/Theatres) அனுமதிக்கப்பட்ட இருக்கைகளில்‌ அதிகபட்சம்‌ 50% பார்வையாளர்களுடன்‌ மட்டும்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

13) திறந்த வெளி விளையாட்டு மைதானங்களில்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி விளையாட்டுப்‌ போட்டிகள்‌ நடத்த அனுமதிக்கப்படும்‌.

14) உள்‌ விளையாட்டு அரங்குகளில்‌ நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப்‌ பின்பற்றி 50% பார்வையாளர்களுடன்‌ விளையாட்டு போட்டிகள்‌ நடத்த அனுமதிக்கப்படும்‌.

15) அழகு நிலையங்கள்‌, சலூன்கள்‌ ஒரு நேரத்தில்‌ 50% வாடிக்கையாளர்களூடன்‌ செயல்பட அனுமதிக்கப்படும்‌.

ஏற்கெனவே அணுமதிக்கப்பட்டுள்ள செயல்பாடுகள்‌ உரிய கட்டுப்பாடுகளுடன்‌ தொடர்ந்து அனுமதிக்கப்படும்‌. இவ்வாறு அந்த அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது:-

* தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளாத 60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஒமைக்ரான்‌ வைரஸ்‌ அதிகம்‌ தாக்க வாய்ப்புள்ளதால்‌ இதுவரை தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளாதவர்கள்‌ தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளுமாறும்‌, முதல்‌ தவணை தடுப்பூசி செலுத்தியிருந்து, இரண்டாம்‌ தவணை தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளாதவர்கள்‌ உடனடியாக இரண்டாம்‌ தவணை தடுப்பூசியையும்‌ செலுத்திக்‌ கொள்ளுமாறு அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

* கடைகளின்‌ நுழைவு வாயிலில்‌, வாடிக்கையாளர்‌ பயன்படுத்தும்‌ வகையில்‌ கை சுத்திகரிப்பான்கள்‌ (Hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல்‌ வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும்‌ (Thermal Screening).

* கடைகளில்‌ பணிபுரிபவர்கள்‌ மற்றும்‌ வாடிக்கையாளர்கள்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிவதைச் சம்மந்தப்பட்ட நிர்வாகம்‌ உறுதி செய்ய வேண்டும்‌ என கேட்டுக்‌ கொள்கிறேன்‌. தவறும்பட்சத்தில்‌ சட்ட ரதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்‌.

* வணிக நிறுவனங்களில்‌ பணிபுரிபவர்கள்‌ மற்றும்‌ அதன்‌ உரிமையாளர்கள்‌ அனைவருக்கும்‌ கட்டாயம்‌ தடுப்பூசி செலுத்தப்பட்‌டிருக்க வேண்டும்‌.

* அனைத்து நிறுவனங்களும்‌ குளிர்‌ சாதன வசதியைத் தவிர்த்து வாடிக்கையாளர்களை அனுமதிக்கும்‌ போது சமூக இடைவெளியை கட்டாயம்‌ கடைப்பிடிக்க அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

நோய்த்‌ தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்‌

நோய்த்‌ தொற்றுக்கு உள்ளானவர்களைக் கண்டறிதல்‌, நோய்த்‌ தொற்றுக்குள்ளானவர்களுடன்‌ தொடர்பிலிருந்தவர்களை கண்டறிதல்‌, சிகிச்சை அளித்தல்‌, தடுப்பூசி செலுத்துதல்‌ மற்றும்‌ கொரோனா நோய்த்‌ தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுதல்‌ (Test-Track—Treat-Vaccination—Covid—19 Appropriate Behaviour) ஆகிய கோட்பாடுகள்‌ கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்‌.

கொரோனா வைரஸ்‌ நோய்த்‌ தொற்று பரவலைத்‌ தடுப்பதற்கு, நோய்த்‌ தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள்‌ உள்ள பகுதிகளில்‌, நோய்க்‌ கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணறிவு வரை (micro Level) வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த்‌ தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர்‌ மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகள்‌ மேற்கொள்ள வேண்டும்‌.

வரையறுக்கப்பட்ட நோய்க்‌ கட்டுப்பாட்டுப் பகுதிகளில்‌, கீழ்க்கண்ட நோய்க்‌ கட்டுப்பாட்டு நடவடிக்கைகள்‌ கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்‌.

நோய்க்‌ கட்டுப்பாட்டுப் பகுதிகளில்‌ அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும்‌ அனுமதி அளிக்கப்பட வேண்டும்‌. இந்த நோய்‌ கட்டுப்பாட்டுப் பகுதிகளில்‌, மருத்துவ அவசர சேவைகள்‌ மற்றும்‌ அத்தியாவசியப்‌ பொருட்கள்‌ வழங்குதல்‌ தவிர, இதர செயல்பாடுகள்‌ அனுமதி இல்லை.

நோய்‌ கட்டுப்பாட்டுப் பகுதிகளில்‌ தீவிரமாக நோய்த்‌ தொற்று பரவலை வீடு வீடாகக் கண்காணிக்கக் குழுக்கள்‌ அமைத்துக் கண்காணிக்கப்படும்‌.

கொரோனா நோய்த்‌ தொற்று கட்டுப்பாடு நடைமுறைகள்‌ தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு விதிமீறல்களில்‌ ஈடுபடுவார்கள்‌ மீது அபராதம்‌ விதிக்கப்படும்‌.

தமிழ்நாட்டில்‌, கொரோனா நோய்த்‌ தொற்று பரவல்‌ கட்டுக்குள்‌ இருந்தாலும்‌ தற்போது உருமாறிய கொரோனா ஒமைக்ரான்‌ வைரஸ்‌ நோய்‌ பரவி வருவதால்‌, பொது இடங்களில்‌ கொரோனா தடுப்பு நடைமுறைகள்‌ கட்டாயம்‌ பின்பற்றப்படுவதைப் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர்‌, மாவட்ட ஆட்சியர்கள்‌ மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகள்‌ உறுதிப்படுத்த வேண்டும்‌. தொழிற்சாலைகள்‌, வணிக நிறுவனங்கள்‌, தனியார்‌ நிறுவனங்கள்‌ ஆகியவற்றில்‌ கொரோனா நோய்த்‌ தடுப்பு நடைமுறைகள்‌ பின்பற்றப்படுவதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்‌.

எதிர்வரும்‌ பண்டிகைக்‌ காலத்தில்‌ பொதுமக்கள்‌ அனைவரும்‌ கூட்டம்‌ கூடுவதைத் தவிர்க்குமாறும்‌, பொது இடங்களில்‌ கட்டாயம்‌ முகக்‌ கவசம்‌ அணிந்து சமூக இடைடுவளியினை கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும்‌. மேலும்‌, மாவட்ட நிர்வாகம்‌, பெருநகர சென்னை மாநகராட்சி, மருத்துவத்‌ துறை மற்றும்‌ உள்ளாட்சி அமைப்புகள்‌ மூலம்‌ நடத்தப்படும்‌ தடுப்பூசி முகாம்களுக்குச் சென்று பொதுமக்கள்‌ குறிப்பாக 60-வயதிற்கு மேற்பட்டவர்கள்‌ தடுப்பூசியினை கட்டாயம்‌ செலுத்திக்‌ கொள்ளுமாறும்‌, மக்கள்‌ நலன்‌ கருதி அரசு மேற்கொள்ளும்‌ நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும்‌ அன்புடன்‌ கேட்டுக்‌ கொள்கிறேன்‌.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...