இன்னும் தடுப்பூசி போடலையா? கோவையில் 177-மையங்களில் நாளை மெகா தடுப்பூசி முகாம்.!

தமிழக அரசு உத்தரவின்படி கோவை மாநகராட்சி பகுதியில்‌ 177-மையங்களில்‌ கோவிட்‌-19 மெகா தடுப்பூசி முகாம்‌ 25.11.2021 ௮ன்று காலை 7.00 முதல்‌ நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்.


கோவை: தமிழக அரசு உத்தரவின்படி கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதியில்‌ 177 மையங்களில்‌ கோவிட்‌-19 மெகா தடுப்பூசி முகாம்‌ 25.11.2021 ௮ன்று காலை 7.00 முதல்‌ நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்.

தமிழக அரசு உத்தரவின்படி கோவிட்‌-19 மெகா தடுப்பூசி முகாம்‌ 25.11.2021 அன்று காலை 7.00 மணி முதல்‌ கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதியில்‌ 177 மையங்களில்‌ நடைபெறவுள்ளது என மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று (24.11.2021) தகவல்‌ தெரிவித்துள்ளார்‌.

கோயம்புத்தூர்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ தெரிவிக்கையில்‌, “கோயம்புத்தூர்‌ மாநகராட்சிப்‌ பகுதிகளில்‌ 94 சதவீதத்திற்கு மேல்‌ முதல்‌ தவணை தடுப்பூசி செலுத்திக்‌ கொண்டுள்ளனர்‌. கோயம்புத்தூர்‌ மாநகராட்சி பகுதிகளில்‌ 18 வயதிற்கு மேல்‌ 1,40,000 நபர்கள்‌ முதல்‌ தவணை தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளாமல்‌ உள்ளனர்‌.

எனவே இந்த மெகா கோவிட்‌ முகாமை பயன்படுத்தி தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளுமாறும்‌, மேலும்‌, 2,45,000 நபர்கள்‌ இரண்டாம்‌ தவணை தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளத் தகுதியுடையவர்களாக உள்ளனர்‌.

(கோவிஷீல்டு முதல்‌ தவணை செலுத்தி 84 நாட்கள்‌ முடிவடைந்தவர்கள்‌ மற்றும்‌ கோவேக்சின்‌ 28 நாட்கள்‌ முடிவடைந்தவர்கள்‌) தடுப்பூசி இரண்டாம்‌ தவணை செலுத்தியவர்களுக்குத் தொற்று தீவிரமையாமல்‌ தடுக்கப்படுகிறது. மேலும்‌ 100 சதவீத பாதுகாப்பும்‌ கிடைக்கப்பெறுகிறது.

மேலும்‌ தியேட்டர்கள்‌ - மால்கள்‌, மற்றும்‌ மக்கள்‌ அதிகமாகக் கூடும்‌ பொது இடங்களில்‌ முதல்‌ தவணை தடுப்பூசி செலுத்தி இரண்டாம்‌ தவணை செலுத்த நாட்கள்‌ முடிவடையாதவர்கள்‌ மற்றும்‌ இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவர்கள்‌ மட்டுமே பொது இடங்களில்‌ அனுமதிக்கப்படுவர் என பொதுச்சுகாதாரத்துறை மூலம்‌ அறிவிப்பு வந்துள்ளது.

எனவே, முதல்‌ தடுப்பூசி செலுத்திக்‌ கொள்ளாதவர்களும்‌ மற்றும்‌ இரண்டாம்‌ தவணை தடுப்பூசி செலுத்தத் தகுதியுடையவர்கள்‌ அனைவரும்‌ 100 சதவீத பாதுகாப்பைப் பெற முகாமில்‌ கலந்து கொண்டு பயன்பெறுமாறு” மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ ராஜ கோபால்‌ சுன்கரா தெரிவித்துள்ளார்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...