பொள்ளாச்சியிலிருந்து தீபாவளி பண்டிகைக்கு 230-சிறப்புப் பேருந்துகள் இயக்கம்.!!

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அலைமோதும் இதனைத் தவிர்ப்பதற்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பொள்ளாச்சியிலிருந்து 230-சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


கோவை: பொள்ளாச்சியிலிருந்து தீபாவளி பண்டிகை 230-சிறப்புப் பேருந்துகள் இயக்கம், கொடிசியாவில் தற்காலிக பேருந்து நிலையம் தொடங்கப்பட்டது.

தீபாவளி பண்டிகை வருகிற 4-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை ஒட்டி வெளியூர்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்று தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவார்கள்.

இதனால், பேருந்துகளில் பயணிகளின் கூட்டம் அலைமோதும் இதனைத் தவிர்ப்பதற்காக அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் பயணிகளின் தேவைக்கு ஏற்ப கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஈரோடு, சேலம், திருப்பூர், தர்மபுரி, நாமக்கல், உள்ளிட்ட பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

இதேபோல சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சி, மதுரை, சிவகங்கை, ராமேஸ்வரம், திருச்செந்தூர், நெல்லை, ராஜபாளையம், குமுளி, தேனி, ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வருகிற 30-ஆம் தேதி முதல் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் கோவையிலிருந்து திருச்சி, மதுரை, தேனி, சேலம், உள்ளிட்ட பகுதிகளுக்குக் கூடுதலாக 200-சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் பயணிகளின் வசதிக்காகத் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கோவை கோட்டம் சார்பில் கொடிசியா வளாகத்தில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

இந்த தற்காலிக பேருந்து நிலையம் வருகிற 30-ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வர உள்ளது. கொடிசியா தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து சேலம் மற்றும் சேலத்தைக் கடந்து செல்லும் வழித்தட பேருந்துகள், திருச்சி மற்றும் திருச்சியைக் கடந்து செல்லும் வழித்தட பேருந்துகள் ஆகியவை இங்கு இருந்து இயக்கப்படுகிறது.

இங்கே பேருந்துகள் நிறுத்தும் இடம் தற்காலிக நிழற்குடை குடிநீர் வசதி கழிப்பிட வசதி உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தி நடந்து வருகிறது. இதேபோல சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திலிருந்து மதுரை மற்றும் மதுரையைச் சார்ந்த வழித்தடங்களில் செல்லும் பேருந்துகள் மற்றும் தேனி மற்றும் தேனியைக் கடந்து செல்லும் பேருந்துகள் இங்கிருந்து இயக்கப்பட உள்ளது.

இது போலப் பொள்ளாச்சியில் உள்ள புதிய மற்றும் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. பொள்ளாச்சியிலிருந்து சேலம், மதுரை, திருச்சி, தேனி போன்ற பணிகளுக்கு 10-சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...