ஆன்லைனில் படிக்கும்போது ஆபாச வீடியோக்கள் வராமல் தடுப்பது எப்படி... கோவை போலீஸார் பெற்றோர்களுக்கு விளக்கம்..!

கோவை: தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாணவ, மாணவியர்க்கு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படுகிறது. ஆன்லைனில் படிக்கும்போது ஆபாச வீடியோக்கள் வராமல் தடுப்பது எப்படி என்று பெற்றோர்களுக்கு போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.


கோவை: தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மாணவ, மாணவியர்க்கு ஆன்லைனில் பாடங்கள் நடத்தப்படுகிறது. ஆன்லைனில் படிக்கும்போது ஆபாச வீடியோக்கள் வராமல் தடுப்பது எப்படி என்று பெற்றோர்களுக்கு போலீஸார் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதனால் பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவ, மாணவிகளுக்கு ஆன்லைன் மூலமாகப் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன்காரணமாக அனைத்து வகுப்பு மாணவ மாணவிகளும் ஸ்மார்ட் போன் பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு மாணவ மாணவிகள் செல்போன்களை பயன்படுத்தும்போது விரும்பத்தகாத விளம்பரங்கள் முகம் சுளிக்கும் வீடியோக்கள் வர வாய்ப்புள்ளது.

எனவே, இதுபோன்ற விரும்பத்தகாத விளம்பரங்களைத் தவிர்க்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக கோவை மாவட்ட போலீஸார் கூறியிருப்பதாவது... ‘‘பெற்றோர் தங்களது குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். ஆன்லைன் வகுப்புகளுக்கான ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் போது கேம் ஸ்கேனர், ஸ்டிக்கர், என் எக்ஸ் வீடியோ பிளேயர், இ.எஸ். ஃபைல் மேனேஜர், யூடியூப். கூகுள் குரோம், ஆகிய செயலிகளை உபயோகப்படுத்தும் தேவை வரலாம், அவ்வாறு பயன்படுத்தும் போது இடையிடையே விரும்பத்தகாத விளம்பரங்கள் வரும் இதனைத் தடுக்க பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் பயன்படுத்தும் ஸ்மார்ட் செல்போனில் ப்ளே ஸ்டோரில் சென்று செட்டிங்ஸில் பேரன்ஸ் கண்ட்ரோல் என்ற பட்டனை ஆன் செய்ய வேண்டும். பின்னர் அதன் கீழே உள்ள ஏப் அண்ட் கேம்ஸ் என்ற திரையைத் தொட்டு தங்களது குழந்தைகளின் வயதை கிளிக் செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து பிலிம்ஸ் என்ற திரையைத் தொட்டு யூ என்பதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் யூடியூப் செட்டிங் சென்று ஜெனரல் பக்கத்தில் உள்ள ரெஸ்றிக்சன் மோட் திரையை தொட்டு ஆன் செய்ய வேண்டும். இந்த முறைகள் செய்வதன் மூலம் குழந்தைகள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும்போது தேவையற்ற விளம்பரம் முகம் சுளிக்கும் வீடியோக்கள் வராமல் தடுக்க முடியும்.

எனவே, ஒவ்வொரு பெற்றோரும் ஸ்மார்ட் போன்களில் பயன்படுத்தும் தங்களது குழந்தைகளைக் கண்காணித்து இதனை செய்ய வேண்டும்.'' இவ்வாறு போலீஸார் ஆன்லைன் மூலமாகப் பாடம் படிக்கும் மாணவ மாணவிகளின் பெற்றோர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

Newsletter

பூளவாடியில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை அறிவிப்பு

பாராமரிப்பு காரணமாக நாளை ஒரு நாள் மட்டும் உட...