தேசிய திறன் வழி தேர்வு - கோவை மாவட்டத்தில் 162 மாணவர்கள் தேர்ச்சி

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை (எம்எச்ஆர்டி) சார்பில் நாடு முழுவதும் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி, திறனறித்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 162 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.


கோவை: தேசிய திறன் வழி தேர்வில் கோவை மாவட்டத்தில் 162 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் மொத்தம் 6695 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். கோவை, தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் (என்எம்எம்எஸ்) கோவை மாவட்டத்தைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் 162 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத்துறை (எம்எச்ஆர்டி) சார்பில் நாடு முழுவதும் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு தேசிய வருவாய் வழி, திறனறித்தேர்வு நடத்தப்படுகிறது. அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் இந்த தேர்வை எழுதலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் பெற்றோரின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.3.50 லட்சத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும்.

ஏழாம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் குறைந்த பட்சம் 55 சதவீத மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டும் இந்த தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு தொடர்ந்து 9, 10 பிளஸ்-1, பிளஸ்-2 ஆகிய 4 வகுப்புகளுக்கான கல்வி உதவித் தொகையாகமாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.

இதன்படி 4 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.48ஆயிரம் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. மாணவர்களின் வங்கி கணக்கில் நேரடியாக இந்த தொகை செலுத்தப்படுகிறது. வறுமை காரணமாக திறமையான மாணவர்கள் பள்ளிக் கல்வியை நிறுத்தி விடக்கூடாது என்பதே இந்த கல்வி உதவித்தொகையின் நோக்கமாகும்.

மாணவர்களின் நுண்ணறிவுத்திறனை சோதிக்கும் வகையில் 90 மதிப்பெண்கள் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களிலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு 90 மதிப்பெண்கள் என மொத்தம் 180 மதிப்பெண்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிவுகள் வெளியானதில், தமிழகத்தில் மொத்தம் 6695 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் கோவை மாவட்டத்தில், மொத்தம் 162 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...