தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் துவங்கியது

அரசு பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீடு பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணை வேந்தர் வெ.கீதாலட்சுமி சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.



கோவை: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை தொடர்ச்சியாக அரசு பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீடு அடிப்படையில் மாணவர்களுக்கு முதற்கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நேற்று தொடங்கியது.



அதன்படி, தரவரிசை பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.



பின்னர் செய்தியாளரிடம் பேசிய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதா லட்சுமி, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டிற்காக மொத்தம் 7,755 விண்ணப்பங்கள் பெறப்பட்டது.

இந்த விண்ணப்பங்களை பள்ளிக் கல்வித் துறைக்கு அனுப்பி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்றது குறித்து ஆய்வு செய்து தகுதியான 6,602 விண்ணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பின்னர், இவர்களுக்கான தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு 413 இளங்கலை படிப்பு இடங்களுக்கு கலந்தாய்வு சான்றிதழ் சரி பார்க்கும் பணிகள் நடந்தது. மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் வந்து கலந்து கொண்டனர்.

தர வரிசை பட்டியலில் முதல் 5 இடங்களை பிடித்த மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த ஐஸ்வர்யா என்ற மாணவி 200- க்கு 196 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளார். அவர் கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. படிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்.

அதேபோல, 194 மதிப்பெண்கள் பெற்ற சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல இந்திரா என்ற மாணவி மதுரை கல்லூரியிலும், 193.5 கட் ஆப் மதிப்பெண்கள் பெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீதேவி என்ற மாணவி கோவை வேளாண் பல்கலைக்கழக கல்லூரியில் தமிழ் வழியில் படிக்க விருப்பம் தெரிவித்தனர்.

இதையடுத்து, இவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு விடுதி கட்டணம் உள்ளிட்ட படிப்புக்கான முழு செலவையும் அரசே ஏற்கும். மாணவர்கள் ஒரு பைசா கூட செலவு செய்ய தேவை இல்லை.

7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டில் இடம் கிடைக்காதவர்கள் பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங்கில் கலந்துகொண்டு கட்டணம் செலுத்தி கல்வி பயிலலாம்.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் 18 நேரடி உறுப்பு கல்லூரிகளிலும் 28 தனியார் உறுப்பு கல்லூரிகளிலும் இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை துவங்கி உள்ளது.

அடுத்த மாதம் (ஜனவரி) எட்டாம் தேதி பொது பிரிவினர்களுக்கான கவுன்சிலிங் நடைபெற உள்ளது. ஜனவரி முதல் வாரத்தில் இவர்களுக்கான வகுப்புகள் தொடங்கப்படும், என்று தெரிவித்தார்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...