கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் பட்டமளிப்பு விழா - 2,531 மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன

2018 - 19 ஆண்டில் இளங்கலை மற்றும் முதுகலை பயின்று தேர்ச்சி பெற்ற 2,531 மாணவிகளுக்கு தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் உறுப்பினர் டாக்டர். ஆர். சீனிவாசன் பட்டங்களை வழங்கி கௌரவித்தார்.



கோவை: கோவையில் உள்ள பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில், 2018 மற்றும் 19 ஆம் ஆண்டிற்கான இளங்கலை மற்றும் முதுகலை மாணவிகளுக்கான பட்டமளிப்பு விழா கல்லூரி வளாக அரங்கில் நடைபெற்றது.

கல்லூரியின் தலைவர் டாக்டர் ஆர். நந்தினி தலைமையில் நடைபெற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில், சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கவுன்சில் உறுப்பினர் செயலர் டாக்டர். ஆர். சீனிவாசன் கலந்து கொண்டார்.



இந்த நிகழ்வில் 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் இளங்கலை மற்றும் முதுகலை பயின்று தேர்ச்சி பெற்ற 2531 மாணவிகளுக்கும், 45 ரேங்க் பெற்ற மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு சான்றிதழ்களை டாக்டர். ஆர். சீனிவாசன் வழங்கி கௌரவித்தார்.



இதனைதொடர்ந்து டாக்டர் ஆர்.சீனிவாசன் மாணவிகளிடையே பேசியதாவது, பெண்கள் தற்போது அனைத்து துறைகளிலும் சாதித்து வருகின்றனர். அறிவியல், கணிணி, விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் உள்ள நவீன கால தொழில் நுட்பங்களை இளம் தலைமுறை மாணவிகள் தொடர்ந்து கற்றுக்கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் இந்தியாவின் குறிப்பிடத்தக்க விஞ்ஞானிகளில் ஒருவரான, "ஆசிய விஞ்ஞானி" இதழில் இடம்பெற்ற புதுடெல்லியின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலாளரான டாக்டர். ஸ்ரீவாரி சந்திரசேகர் காணொலி காட்சி வாயிலாக கல்லூரி மாணவிகளிடையே பேசியது குறிப்பிடத்தக்கது.



இந்த பட்டமளிப்பு விழாவில், கல்லூரி முதல்வர் டாக்டர் மீனா, செயலர் டாக்டர் யசோதா தேவி, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...