கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 20வது ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 20வது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் பாஷ் குளோபல் சாப்ட்வேர் நிறுவன இயக்குனர் அமித் குமார் மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி சிறப்புரையாற்றினார்.


கோவை: ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 2020 - 2021 வருடத்திற்கான பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவன தலைவரும் நிர்வாக அறங்காவலருமாகிய எஸ்.மலர்விழி துவக்கி வைத்தார்.

கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின்அறங்காவலர் ஆதித்யா பங்கேற்று விழாவை சிறப்பித்தார். ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் முனைவர் ஜே.ஜேனட் அனைவரையும் வரவேற்று கல்லூரியின் 2020 - 2021 வருடத்திற்க்கான ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார்.



நிகழ்ச்சியில் பாஷ் குளோபல் சாப்ட்வேர் டெக்னாலஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் முதுநிலை இயக்குனர் அமித் குமார் இவ்விழாவின் தலைமை விருந்தினராக கலந்துக்கொண்டு பட்டமளிப்பு விழா சிறப்புரையாற்றினார்.



மேலும் அவர் தலைமை விருந்தினர் 1281 மாணவர்களுக்கு பட்ட சான்றிதழ்கள் வழங்கினார்.



கல்வியில் மிகச்சிறந்து விளங்கிய உயர் மதிப்பெண்கள் பெற்ற முதல் 30 மாணவர்கள் தலைமை விருந்தினரிடம் வாழ்த்துப் பெற்றனர். இவ்விழாவில் ஸ்ரீகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் பல்வேறு துறைகளின் தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...