கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலை-யில் முதலாமாண்டு பொறியல் மாணவர்களின் 2022-23 கல்வியாண்டு துவக்க விழா..!

துவக்க விழாவில், இன்போசிஸ்‌ நிறுவனத்தின்‌ மனிதவள மேம்பாட்டுத்துறைத் தலைவர்‌ ருஜித்குமார், மாணவர்களுக்கு இலக்கு என்பது வேண்டும்‌, இலக்கை தீர்மானித்து விட்டால், பின்பு நீங்கள்‌ சாதிப்பது சுலபம் என்று அறிவுறுத்தினார்.


கோவை: கோவை கற்பகம்‌ நிகர்நிலை பல்கலைக்கழத்தில்‌ இன்று முதலாமாண்டு பொறியியல்‌ துறை மாணவர்களின்‌ 2022-23 கல்வியாண்டு துவக்க விழா நடைபெற்றது.



பல்கலைக்கழக தலைவர்‌ முனைவர்‌ ரா.வசந்தகுமார் தலைமையில், நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இன்போசிஸ்‌ நிறுவனத்தின்‌ மனிதவள மேம்பாட்டுத்துறைத் தலைவர்‌ ருஜித்குமார்‌ கலந்துகொண்டு மாணவர்கள்‌ மற்றும்‌ பெற்றோரிடையே சிறப்புரையாற்றினார்.



அப்போது அவர் பேசியதாவது, பெற்றோர்கள்‌ தான்‌ நம்‌ தெய்வங்கள்‌ அவர்கள்‌ இல்லையென்றால்‌ நாம்‌ வசதியாக வாழ முடியாது. இந்தக்‌ கல்வியை நாம்‌ பெறுவதற்ரு அவர்களே காரணம். நாம்‌ படித்து முடித்து நல்ல நிலைக்கு வந்தவுடன்‌ அவர்களை பேணிகாக்க வேண்டும்.



குறிப்பாக மாணவர்களுக்கு இலக்கு என்பது வேண்டும்‌ அந்த இலக்கை தீர்மானித்துவிட்டால், பின்பு நீங்கள்‌ சாதிப்பது சுலபம். இன்று பொறியியல்‌ துறையில்‌ நாம்‌ அபார வளர்ச்சியும், சாதனைகளும்‌ புரிந்நு வருகிறோம். உலக நாடூகளுக்கு பொறியியல்‌ துறையில்‌ இந்தியா ஒரு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.



நிறைவாக, அறிவியல்‌ மற்றும்‌ மனிதவளம் துறை தலைவர்‌ முனைவர்‌. தெய்வநாயகி நன்றி கூறினார்‌. நிகழ்ச்சியில்‌, மாணவர்‌ நலன்‌ முதன்மையர்‌ முனைவர்‌.ப.தமிழரசி, துணை பதிவாளர்‌.முனைவர்‌.பிரதாப்‌, நேர்வுகள்‌ கட்டுப்பாட்டு அலுவலர்‌ முனைவர்‌.பழனிவேலு அனைத்துத்‌ துறைத்‌ தலைவர்கள்‌ மற்றும் பேராசிரியர்கள்‌ கலந்து கொண்டனர்‌.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...