டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் 6 – வதுமுறையாக பங்கேற்று சாதனை படைக்கும் கோவை கல்லூரி மாணவர்கள்!

கோவை: டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு தொடர்ந்து 6-வது முறையாக கோவை கல்லூரி மாணவர்கள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.


கோவை: டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழா அணிவகுப்பு தொடர்ந்து 6-வது முறையாக கோவை கல்லூரி மாணவர்கள் பங்கேற்று சாதனை படைத்துள்ளனர்.

ஆண்டுதோறும் ஜனவரி 26-ஆம் தேதி தலைநகர் புதுடெல்லியில் இந்தியக் குடியரசுத் தலைவர் முன்னிலையில் நடைபெறும் குடியரசுதினவிழா அணிவகுப்பில் கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்டம்மற்றும் தேசிய மாணவர் படை மாணவர்கள் பங்கேற்று வருகின்றனர்.

இந்த ஆண்டுடன் சேர்த்து தொடர்ந்து 6-வதுமுறையாக பங்கேற்று தொடர் சாதனை படைத்துள்ளனர். இந்த அணிவகுப்பில் என்.எஸ்.எஸ் அணி சார்பில் மாணவர் பி.பிரவின்குமார் கலந்து கொண்டு கல்லூரிக்குப் பெருமை சேர்த்துள்ளார்.

நவம்பர் 27 முதல் டிசம்பர் 6 வரை திருச்சியில் நடைபெற்ற குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்பதற்கான முதல்கட்டப் பயிற்சியில் பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பாக இக்கல்லூரியைச்சேர்ந்த மாணவர் பி.பிரவின்குமார்ஹ் மற்றும் மாணவி எஸ்.பவித்ரா ஆகியோர் தோ்வாகி பத்து நாட்கள் பயிற்சி பெற்றனர். இந்தப் பயிற்சியில் தங்களது தனித்திறன்களை வெளிப்படுத்தி தற்போது மாணவா் பி.பிரவின்குமார் புதுடெல்லியில் குடியரசுத் தலைவரின் முன்னிலையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.

இவர் சிலம்பம் உள்ளிட்ட கலைத்திறன் வெளிப்பாடு, சமூககளப்பணி அனுபவம், அறிவுத்திறன் சார்ந்த நேர்காணல் ஆகிய பல படிநிலைகளைக் கடந்து இச்சாதனைக்குத் தேர்வாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

என்.எஸ்.எஸ் அணியில் மட்டுமல்லாமல் இதே கல்லூரியின் மாணவர் ஆா்.எஸ்.அரவிந்த் தமிழ்நாடு என்.சி.சி. அணி சார்பாக அதே குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கவுள்ளார் என்பது கூடுதல் சிறப்பம்சமாகும். இம்மாணவர் மதுரையில் நவம்பா் 16 முதல் டிசம்பர் 16 வரை மூன்று கட்டங்களாக நடைபெற்ற பயிற்சியில் கலந்துகொண்டு தனது தனித்திறன்களைவெளிப்படுத்தியதுடன் தனது விடாமுயற்சியாலும் இந்தச் சாதனையை படைத்துள்ளார்.

மேலும், மாணவி எஸ்.பவித்ராவும் தமிழக அளவில் சென்னையில் ஆளுநா் முன்னிலையில் நடைபெறவுள்ள குடியரசு தின விழா அணிவகுப்பில் என்.எஸ்.எஸ் சார்பில் பங்கேற்கவுள்ளார்.

இவ்வாறு ஜனவரி 26 குடியரசு தின விழா நாளில் இந்தியாவின் தலைநகர் முதல் தமிழகத்தின் தலைநகர் வரையிலும் அரசாங்கத்தின் சார்பாக நடக்கவுள்ள அணிவகுப்பில் கோவையைச் சேர்ந்த ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் கலந்து கொள்வதுடன் தொடர்ந்து 6 முறை இச்சாதனை நிகழ்த்தியதன் மூலம் இக்கல்லூரி நாட்டுநலப்பணியாற்றுவதிலும், சிறந்த இளைய சமுதாயத்தை உருவாக்குவதிலும் தனி முத்திரை பதித்துவருகிறது.

இந்திய தேசத்திற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்து சாதனை படைக்கவுள்ள இந்த மாணவா்களுக்கு எஸ்.என்.ஆர் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லஷ்மி நாராயணஸ்வாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கல்லூரி முதல்வா் மற்றும் செயலா் முனைவர் பி.எல்.சிவக்குமார் மாணவா்களை வாழ்த்தியதுடன் இனி வரும் காலங்களிலும் தங்கள் கல்லூரி மாணவா்களின் சாதனைகள் தொடரும் என்று பெருமிதத்துடன் தொிவித்தார்.

கல்லூரியின் என்.எஸ்.எஸ். அலுவலா் பேராசிரியர் பிரகதீஸ்வரன் குடியரசு தின விழா அணிவகுப்பில் மாணவர்கள் பங்கெடுக்க முனைப்புடன் செயல்படுகிறார். மாணவர்களின் இந்த தொடர் சாதனைக்கு இவரது அரிய முயற்சியும் மிக முக்கியமான காரணமாகும். கல்லூரியின் சார்பாக நாட்டு நலப்பணித்திட்ட திட்ட அலுவலா்களான பேராசிரியர்கள் சுபாஷினி, நாகராஜன் மற்றும் தேசிய மாணவா் படை அலுவலர் லெப்டினண்ட் விவேக் ஆகியோரின் பணியைப் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.

Newsletter

உடுமலையில் பெண் குழந்தை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான கருத்தà®...