'என்னங்க சார் உங்க சட்டம், என்னங்க சார் உங்க திட்டம்' :கோவையில் நடிகர் மயில்சாமி ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு!


ஜல்லிக்கட்டு மீது விதிக்கப்பட்டுள்ள தடையை உடனடியாக நீக்க வேண்டும். தமிழர்களின் வீரவிளையாட்டை எதிர்த்துள்ள பீட்டா அமைப்பினை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் என லட்சக் கணக்கானோர் ஒன்றிணைந்து தற்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாணவர்களின் இத்தகைய கலாச்சார பாதுகாப்பு போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் தற்போது வரை உரிய நடவடிக்கை மேற்கொள்ளாததால் அரசு நிர்வாகத்தினை எதிர்த்தும் தற்போது மாணவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

இதனிடையே, மாணவர்களின் இந்த தன்னெழுச்சியான போராட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும், தனியார் நிறுவனத்தினரும், தன்னார்வலர்களும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக ஜல்லிக்கட்டு வீரவிளையாட்டுக்கு தனது ஆதரவினை தெரிவித்து இன்று கோவை வந்த நடிகர் மயில்சாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், 

ஒட்டுமொத்த தமிழக மக்களின் வயிற்று எரிச்சலை கொட்டிக்கொள்ள வேண்டாம். ஜல்லிக்கட்டை  நடத்த அனுமதிக்கும் வரை உலகமெங்கும் ஏதாவது ஒரு விபத்து நடக்கும். நேற்று டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டதே அதற்கு உதாரணம். அதனால், தயவு செய்து ஜல்லிக்கட்டு கலாச்சாரத்தை வாழவிடுங்கள். 

கர்நாடக மாநிலம் தண்ணீர் விடாமல் இருக்கிறது, அதை தமிழக அரசு மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருக்கிறது. அந்தந்த மாநில உரிமை பிரச்சனைகளாக கருதும் அரசு, ஜல்லிக்கட்டை ஏன் இந்திய அரசியலாக்குகிறது. இது எங்கள் மாநிலத்திற்குள் இருக்கும் உரிமை. ஜல்லிக்கட்டு நடக்க வேண்டும். இல்லையென்றால் இந்த போராட்டம் தொடரும்" என்றார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...